Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2026 9:14 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#65255

கழிவுநீர் கால்வாய் தொட்டியால் ஆபத்து

கழிவுநீர்

காங்கயம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். டவுன் பஸ் நிலையத்தின் பக்கவாட்டில் கைவிடப்பட்ட கழிவறை அருகே கழிவுநீர் செல்ல நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் தொட்டி மூடி திறந்து கிடக்கிறது. பல நாட்களாக திறந்து கிடக்கும் இந்த தொட்டி இரவு நேரங்களில் பார்வைக்கு தெரிவதில்லை. கவனக்குறைவாக நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், திறந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் தொட்டியை நிரப்பி வருகின்றன. எனவே, திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:14 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#65254

காட்சி பொருளான தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர்

உடுமலை அருகே குறிஞ்சேரி ஊராட்சி உள்ளது. இந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆங்காங்கே பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. இதையொட்டி தொட்டிகளில் ஒரு சில மாதங்கள் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவும் இல்லை. தொட்டியை பராமரிக்கவும் இல்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கப்படுகிறார்கள. எனவே குறிஞ்சேரி ஊராட்சியில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்து அவற்றில் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:13 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65253

எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து

போக்குவரத்து

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் செல்ல முற்படும்போது மெயின் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் சிக்னல் இல்லாததால் பஸ்கள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பஸ்நிலையத்திற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:13 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65252

பராமரிக்கப்படாத சுகாதார வாளகம்

மற்றவை

பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் இதன் கதவுகள் துருப்பிடித்து, ஓட்டைகளுடன் காணப்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து, சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, சேதமடைந்த கதவுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனு, மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:12 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65251

பல்லாங்குழி சாலை

சாலை

பொங்கலூரை அடுத்த தேவணம்பாளையத்தில் இருந்து ராமம்பாளையம் வழியாக வேலம்பட்டிக்கு தார் சாலை செல்கிறது. சுமார் 2.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த வழியாக ஏராளமான பள்ளி வாகனங்களும் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் வாகன பழுதும் ஏற்பட்டு வருகிறது. எனவே பல்லங்குழி சாலையை உடனடியாக மேம்படுத்தி புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:43 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#64893

ஆபத்தான மின்கம்பங்கள்

மின்சாரம்

குடிமங்கலம் அருகே பூளவாடி சந்தைப்பேட்டை சுங்ககேட் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தாக காணப்படுகிறது. எந்த நேரத்திலும் சாயும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக மன்கம்பம் அருகே செடிகள் மற்றும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு மின்கம்பத்திலும் மின் இணைப்புகள் மற்றும் உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பங்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64892

துர்நாற்றத்தால் குழந்தைகள் அவதி

குப்பை

திருப்பூர் கொங்கு நகரில் ஸ்ரீவெங்கடாசலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து வைத்து வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அதாவது வீடுகள்தோறும் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து கொண்டுவரும் குப்பைகளை பள்ளிக்கூடம் முன்பு காலை முதலே சேகரித்து வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குப்பை சேகரிக்கப்பட்ட பின் வாகனங்களை வரவழைத்து குப்பையை ஏற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:42 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#64891

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

பொங்குபாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பரமசிவம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதேபோல் மாரப்பம்பாளையம் பிரிவிலும் குப்பைகள் அதிக அளவில் உள்ளது. இவை நீண்ட நாட்களாக அள்ளப்படாததால், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், கொசு மற்றும் ஈக்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பையை முறையாக அகற்ற வேண்டும். குமார், பொங்குபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#64890

கிடப்பில் கிடக்கும் சாலைப்பணி

சாலை

திருப்பூர் மண்ணரை ஏ.எஸ்.பண்டிட் நகர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தையொட்டிய பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு புதியதாக சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. தொடர்ந்து ரோட்டில் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்ட ரோட்டில் பரப்பப்பட்டன. ஆனால் அதன்பின் சாலை அமைப்பதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இந்த ரோட்டில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64889

நொய்யல் ஆற்றில் வீசப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பூரில் நொய்யல் ஆறு பாழ்படுவதை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க ஆற்றின் கரையை சுற்றிலும் இரும்பு கம்பிகளை கொண்டு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், ஆற்றில் குப்பை கொட்டுவது முழுமையாக தடுக்கப்படவில்லை. சில இடங்களில் கடைகள் மற்றும் வீடுகளில் வெளியாகும் குப்பைகளை இரும்பு வேலிகளை துண்டித்து ஆற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் சில இடங்களில் வேலிக்கு மேலே ஆற்றுக்குள் குப்பைகளை வீசியும் வருகின்றனர். குறிப்பாக மாநகரப்பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:51 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64810

பகலில் எரியும் தெரு விளக்குகள்

மின்சாரம்

பல்லடம் நகரில் பஸ் நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. அவை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரிவதால் அரசின் நிதி வீணாக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில், தெரு விளக்குகள் தொடர்ந்து எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுதாகிறது. இதனால், இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பகல் நேரத்தில் எரியும் தெரு விளக்குகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:49 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64809

குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் விநாயகர் கோவில் வீதி உள்ளது. அங்கு போக்குவரத்து அதிகம் இருப்பதால் அந்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் அந்த சாலையோரம் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. ேமலும் குப்பைகளில் இரை தேடவரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகனங்கள் மீது மோதி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். அப்பகுதியில் ஈக்கள் அதிக அளவில் இருப்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி சுகாதாரகேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அங்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick