Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2026 4:49 PM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#64808

குண்டும், குழியுமான நெடுஞ்சாலை

சாலை

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் பழைய பஸ் நிலையத்தை அடுத்த பெட்ரோல் பங்க் அருகில் தார்ச்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் இந்த குழியில் இறங்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் குழி இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். மேலும், குழியை பார்த்து தங்களுடைய வாகனங்களை திடீரென்று நிறுத்துவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:48 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#64807

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட என்.என்.பேட்டை வீதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள மின் கம்பம் ஒன்று சிமெண்டுகள் பெயர்ந்து அடிப்பகுதியில் கீறல் விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும், தனியார் நிறுவன கேபிள் வயர்கள் மின்கம்பத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. எனவே, சேதமடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 4:47 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64805

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பூர் அருகே உள்ள டி.கே.டி. மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லை நகரில் இருந்து சாக்கடை கால்வாய் வழியாக வரும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கழிவுநீர் படுவதால் வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:56 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#64370

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அருகில் குப்பை முறையாக அல்லாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச்சுசூழல் மாசு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்தப்படி செல்லும் நிலை உள்ளது. இதேபோல், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு குப்பையை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், கணக்கம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:49 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64369

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

பல்லடம் என்.ஜி.ஆர். ரோடு கடைவீதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இங்கு வரும் சரக்கு வாகனங்களை சிலர் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, கடைவீதியில் வாகனங்களை முறையாக நிறுத்தவும், சரக்கு வாகனங்கள் அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கொண்டு வரவும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:48 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#64368

மூடப்படாத குழியால் விபத்து

சாலை

திருப்பூர் அருகே கணபதிபாளையத்தில் இருந்து அல்லாளபுரம் வழியாக அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் அங்குள்ள பி.ஏ.பி. வாய்க்கால் அருகே மரத்தின் வேர்களால் அடைப்பு ஏற்பட்டது. இதையொட்டி, குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் தினமும் விபத்துகள் நடக்கிறது. மேலும் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடிநீர் குழாயை சீரமைக்க தோண்டப்பட்ட குழியை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64367

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து பிரிந்து பி.ஏ.பி. கிளை வாய்க்கால் முத்தணம்பாளையம் வழியாக செல்கிறது. இந்த கால்வாய் கடந்த சில மாதங்களாக தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் கால்வாயை மறிந்து மண் கொட்டி பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும்போது முறையாக செல்ல முடிவதில்லை. எனவே வாய்க்காலை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்பிரமணியன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 May 2026 9:46 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#64366

குண்டும், குழியுமான சாலை

சாலை

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணைக்கிணர் முதல் கோமங்கலம் வரை செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த கிராம இணைப்பு சாலை வழியாக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் வாகனங்களும் பள்ளிக்கு செல்லும் வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 May 2026 2:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#64274

ஒளிராத தெருவிளக்குகள்

ஒளிராத தெருவிளக்குகள்மின்சாரம்

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து வி.ஜி.பி. செல்லும் சாலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை. இந்த இருளடைந்த சாலையில், இரவு நேரங்களில், பணிகள் முடித்து வரக்கூடிய பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருவிளக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 3:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#64098

நாய்கள் தொல்லை தீருமா?

மற்றவை

திருப்பூரில் நாய்கள் தொல்லை தீர்ந்தபாடிவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்று குரைக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. அந்த நாய்கள் கூட்டத்தின் வழியே சென்றால்,அவை வாகனத்தை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீழே விழுந்துவிடுகிறார்கள். இது என்றோ ஒருநாள் நடக்கும் நிகழ்வு அல்ல. தினம், தினம் மக்கள் அனுபவிக்கும் கொடுமை. இதற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 11:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#63872

மின்விளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் இருந்து கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக இருட்டை பயன்படுத்தி மர்மநபர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கே.செட்டிப்பாளையம் வழியாக வீரபாண்டிக்கு செல்லும் சாலையோரம் முக்கிய இடங்களில் மின்விளக்கு வசதி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 May 2026 10:44 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#63860

புதர் மண்டிய சாலையால் விபத்து

சாலை

குடிமங்கலம் அருகே கொங்கல்நகரத்திலிருந்து லிங்கம்மாவூர் வழியாக பொட்டயம்பாளையம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் சென்று வருவதால் பரபரப்பாக காணப்படும். தற்போது சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. சாலையின் வழியாக பஸ் செல்லும் போது எதிரே இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே சாலை ஓரங்களில் இருபுறமும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick