Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 July 2026 9:43 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#65429

மின்கம்பியில் தொங்கும் மின்விளக்கு

மின்சாரம்

காங்கயத்தில் உள்ள 8-வது வார்டு, காந்திநகரில் அரசமரத்து விநாயகர் கோவில் முன்புள்ள மின் கம்பத்தில் கடந்த 2 நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். மேலும அந்த மின் கம்பத்தில் பொறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து கழண்டு மின்கம்பிகளில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த மின்விளக்கு கீேழ விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே பேராபத்து ஏற்படும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 9:42 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#65428

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதேபோல், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீேழ விழுந்து விடுகிறார்கள். மேலும் துா்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மூக்கைப் பொத்தியப்படி செல்லும் அவல நிலை நீடிக்கிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 9:42 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#65427

கோவில் முன் ஆபத்தான மரம்

மற்றவை

கொழுமத்தில் உள்ள தாண்டவேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில், கோவிலின் முன்பாக பழமையான மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் தண்டு பகுதி பெரும்பாலாக கரையான்களால் அரிக்கப்பட்டு, உட்புறம் பொந்து போல மாறி பலமிழந்து காணப்படுகிறது. இந்த மரத்தின் மிக அருகிலேயே மின்சார கம்பிகள் செல்கின்றன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால், மரம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து, மின்சார கம்பிகள் சேதமடை வாய்ப்பு உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் இந்த மரத்தை முறையாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 9:41 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#65426

சாலையோரத்தில் குவியும் குப்பைகள்

குப்பை

மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுந்தரராம லே-அவுட் உள்ளது. இந்த பகுதியில், பொது நூலகம், வேளாண் கூட்டுறவு மையம் மற்றும் மருத்துவமனைகள் அமைந்துள்ளன. இதனால் தினமும், ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு முன்பாக சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில், பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து தெரு முழுவதும் பரவுவதுடன், கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதாரக்கேடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 July 2026 9:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#65425

பழுதான குடிநீர் எந்திரம்

தண்ணீர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வைக்கப்பட்டது. இது போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த சில நாட்களாக செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் எந்திரத்தை சரி செய்து பொதுமக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மதுரை, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:14 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#65255

கழிவுநீர் கால்வாய் தொட்டியால் ஆபத்து

கழிவுநீர்

காங்கயம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். டவுன் பஸ் நிலையத்தின் பக்கவாட்டில் கைவிடப்பட்ட கழிவறை அருகே கழிவுநீர் செல்ல நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் தொட்டி மூடி திறந்து கிடக்கிறது. பல நாட்களாக திறந்து கிடக்கும் இந்த தொட்டி இரவு நேரங்களில் பார்வைக்கு தெரிவதில்லை. கவனக்குறைவாக நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும், திறந்த கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், மண் மற்றும் குப்பைகள் தொட்டியை நிரப்பி வருகின்றன. எனவே, திறந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:14 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#65254

காட்சி பொருளான தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர்

உடுமலை அருகே குறிஞ்சேரி ஊராட்சி உள்ளது. இந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆங்காங்கே பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டன. இதையொட்டி தொட்டிகளில் ஒரு சில மாதங்கள் தண்ணீர் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பவும் இல்லை. தொட்டியை பராமரிக்கவும் இல்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கப்படுகிறார்கள. எனவே குறிஞ்சேரி ஊராட்சியில் தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பு செய்து அவற்றில் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:13 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65253

எரியாத சிக்னல் விளக்குகளால் விபத்து

போக்குவரத்து

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்கு உள்ளே பஸ்கள் செல்ல முற்படும்போது மெயின் ரோட்டில் வேகமாக வரும் வாகனங்கள் சிக்னல் இல்லாததால் பஸ்கள் மீது மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே பஸ்நிலையத்திற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:13 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65252

பராமரிக்கப்படாத சுகாதார வாளகம்

மற்றவை

பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் இதன் கதவுகள் துருப்பிடித்து, ஓட்டைகளுடன் காணப்படுகிறது. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து, சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, சேதமடைந்த கதவுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனு, மங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2026 9:12 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#65251

பல்லாங்குழி சாலை

சாலை

பொங்கலூரை அடுத்த தேவணம்பாளையத்தில் இருந்து ராமம்பாளையம் வழியாக வேலம்பட்டிக்கு தார் சாலை செல்கிறது. சுமார் 2.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த வழியாக ஏராளமான பள்ளி வாகனங்களும் செல்வதால் அடிக்கடி விபத்துகளும் வாகன பழுதும் ஏற்பட்டு வருகிறது. எனவே பல்லங்குழி சாலையை உடனடியாக மேம்படுத்தி புதிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:43 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#64893

ஆபத்தான மின்கம்பங்கள்

மின்சாரம்

குடிமங்கலம் அருகே பூளவாடி சந்தைப்பேட்டை சுங்ககேட் பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தாக காணப்படுகிறது. எந்த நேரத்திலும் சாயும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக மன்கம்பம் அருகே செடிகள் மற்றும் புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு மின்கம்பத்திலும் மின் இணைப்புகள் மற்றும் உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சேதமடைந்த மின்கம்பங்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Jun 2026 10:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#64892

துர்நாற்றத்தால் குழந்தைகள் அவதி

குப்பை

திருப்பூர் கொங்கு நகரில் ஸ்ரீவெங்கடாசலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து வைத்து வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அதாவது வீடுகள்தோறும் துப்புரவு பணியாளர்கள் சேகரித்து கொண்டுவரும் குப்பைகளை பள்ளிக்கூடம் முன்பு காலை முதலே சேகரித்து வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குப்பை சேகரிக்கப்பட்ட பின் வாகனங்களை வரவழைத்து குப்பையை ஏற்றி அனுப்புகின்றனர். இவ்வாறு சேகரித்து வைக்கப்படும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick