Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2026 2:21 PM GMT
பொதுமக்கள் | சங்ககிரி
#66567

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் அரசிராமணி மூலப்பாதையில் 4 சாலைகள் சந்திக்கும் வளைவு உள்ளது. இந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’யில் கடந்த 10-ந் தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக சாலையில் தோன்றிய பள்ளம் சீரமைக்கப்பட்டது. எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 2:14 PM GMT
பெருமாள் | சேலம்-வடக்கு
#66565

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

ட்ரெண்டிங்

சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் நெத்திமேடு செல்லும் சாலை கேட்டுக்காடு தெருவிற்கு திரும்பும் இடத்தில் சாலை சேதமடைந்தும், குண்டும், குழியுமாகவும் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினத்தந்தி’க்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:58 PM GMT
சமூக ஆர்வலர் | காஞ்சிபுரம்
#66542

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

காஞ்சீபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தனஞ்சேரி காலனி காந்தி தெருவில், விநாயகர் கோவில் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, சாய்ந்த நிலையில் உள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:57 PM GMT
கோவிந்தராஜன் | செங்கல்பட்டு
#66541

ஆரம்ப சுகாதர நிலையம் வேண்டும்

மற்றவை

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் அணுசக்தித் துறை ஊழியர்களின் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் சொந்த வீடுகள் கட்டி நிரந்தரமாக வசித்து வருவதால், இப்பகுதியில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அவசர காலங்களில் சிகிச்சை பெறுவதில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:56 PM GMT
டேவிட், | செங்கல்பட்டு
#66540

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

தேங்கி கிடக்கும் கழிவுநீர்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி வள்ளலார் பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. இந்த சாலையின் அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். சாலையில் கழிவுநீர் தேங்கிக்கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையில் தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:54 PM GMT
ஏழுமலை | திருவள்ளூர்
#66539

புதிய சாலை வேண்டும்

புதிய சாலை வேண்டும்சாலை

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சி மேட்டுத்தாங்கல் தெருவில் உள்ள சாலையில் சிறிதளவு மழை பெய்தாலே மழைநீர் தேங்கிவிடுகிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் தேங்கி நிற்கும் நீரால் அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:50 PM GMT
சமூக ஆர்வலர்கள் | திருவள்ளூர்
#66537

சமூக விரோதிகளின் கூடாரம்

மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் நாரவாரி குப்பம், வேணுகோபால்சாமி கோவில் தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் அரசு குழந்தைகள் பால்வாடி பள்ளியும் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கோவில் வளாகத்திற்குள் ஏராளமானோர் மது அருந்துவது மற்றும் சீட்டு விளையாடுவது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாகச் செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து செங்குன்றம் போலீஸ்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:44 PM GMT
அப்துல் காதர் | திருவள்ளூர்
#66534

எரியாத தெருவிளக்கு

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஆங்காடு-நியூ சன்சிட்டி பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வெளிச்சம் இல்லாத சூழலால் குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் இப்பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:42 PM GMT
விமல் | திருவள்ளூர்
#66532

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வண்டலூர் பைபாஸ்-மாங்காடு செல்லும் சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இப்பகுதியில் உள்ள சிலர் வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து சாலை ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் குவிந்துள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Aug 2026 1:40 PM GMT
சுந்தரவேலு | திருவள்ளூர்
#66531

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருவள்ளூர் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியில் தக்கோலம் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் வரையில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன்பிறகு சாலை சீரமைப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, இன்றுவரை முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick