Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Nov 2025 7:48 AM GMT
சமூக ஆர்வலர் | காஞ்சிபுரம்
#60480

பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்

பொதுமக்களை அச்சுறுத்தும் மின்கம்பம்மின்சாரம்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் அம்மன் காலனி, பார்த்தசாரதி தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான வகையில் தெருவின் மையத்தில் வளைந்தநிலையில் வாகனஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் வாகனங்கள் அப்பகுதியில் சரிவர செல்ல முடிவதில்லை. இந்த பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனே கடக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:46 AM GMT
ஜெயராமகிருஷ்ணன் | செங்கல்பட்டு
#60479

பொதுமக்கள் அவதி

பொதுமக்கள் அவதிகழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 21-வது வார்டு ஆர்.கே.வி. அவென்யூ மற்றும் ஐவே காலனி இடையில் 18 அடி மழை நீர் கால்வாய் இருந்தது. தற்போது அது 6-அடியாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் அந்த கால்வாயில் முழுமையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கும் அவலம் நீடிக்கிறது. தேங்கிகிடக்கும் நீரால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய்தொற்று அபாயம் இருக்கிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:44 AM GMT
ஊர் பொது மக்கள் | காஞ்சிபுரம்
#60478

செடி,கொடிகள் அகற்றப்படுமா?

மற்றவை

காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமத்தில் உள்ள ஏரி உபரிநீர் வடியும் கால்வாயில் செடி,கொடிகள் ஆக்கிரமித்து நீர் சரியாக செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பலமுறை இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே நீர் செல்வதற்கு ஏதுவாக அங்குள்ள ஆக்கிரமிப்பு செடி,கொடிகளை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:42 AM GMT
முனிவேல் | திருவள்ளூர்
#60477

முறையற்ற சாக்கடை கழிவுகள் அகற்றம்

முறையற்ற சாக்கடை கழிவுகள் அகற்றம்கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடுபகுதியின் 10-வது வார்டுக்குட்பட்ட துரை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பாதாள சாக்கடையின் கழிவுகள் பல நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது. தற்போது அந்த கழிவுகளை அகற்றும் முறையும் அப்பகுதி மக்களை தொற்றுநோய்க்கு நேராக அழைத்து செல்வதாக உள்ளது. திறந்த வெளியில் கொட்டப்பட்ட இந்த கழிவுகளால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:41 AM GMT
தியாகராசன் | சென்னை
#60476

நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

நடைபாதையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்போக்குவரத்து

சென்னையை அடுத்த தாம்பரம், கிருஷ்ணா நகரின் முடிச்சூர் சாலையில் உள்ள நடைபாதையில் மர்ம நபர்கள் சிலர் வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் இந்த ஆக்கிரமிப்பால் படும் இன்னல் ஏராளம். எனவே, இந்த சார்ந்த துறை அதிகாரிகள் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:39 AM GMT
சாஜிதா | சென்னை
#60475

குடியிருப்புவாசிகள் அச்சம்

குடியிருப்புவாசிகள் அச்சம்குப்பை

சென்னை மாங்காடு, ஸ்ரீ சக்ரா நகர் பகுதியின் ஓம் சக்தி நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சினிமா தியேட்டர் பின்புறம் சாலையோரமாக குப்பைகள் தேங்கி பொதுமக்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக கிடக்கிறது. இதனால் அதனருகே வசிக்கும் குடியிருப்புவாசிகள் நோய்தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் குப்பைகள் பாதுகாப்பான வகையில் கொட்டப்படவும், அகற்றப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:37 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#60474

துருபிடித்த மின்பெட்டிகள்

துருபிடித்த மின்பெட்டிகள்மின்சாரம்

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின்பெட்டிகள் திறந்தநிலையில் துருபிடித்து குடியிருப்புவாசிகளுக்கு ஆபத்தாக காணப்படுகிறது. சாய்ந்துகிடக்கும் பல மின்பெட்டிகளால் மழைக்காலங்களில் அடிக்கடி மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மிகுந்த பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்பெட்டியை உடனடியாக மாற்றவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:36 AM GMT
அரிகரன் | சென்னை
#60473

பாதாளசாக்கடை மூடி சேதம்

பாதாளசாக்கடை மூடி சேதம்கழிவுநீர்

சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்குட்பட்ட டாக்டர் சுப்பராயன் நகர் 6-வது தெருவில் உள்ள 2-வது குறுக்கு தெருவின் முனையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து பல மாதங்களாக மாற்றப்படாமல் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. குழந்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருப்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்ப முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் பாதாள சாக்கடையின் மூடியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:35 AM GMT
ராஜசேகர் | சென்னை
#60472

ஆபத்தான மின்பெட்டி

ஆபத்தான மின்பெட்டிமின்சாரம்

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே அமைந்துள்ள தாயப்ப முதலி தெருவில் உள்ள ஒரு மின்சார பெட்டி திறந்து ஒயர்கள் வெளியே தெரிந்து பொதுமக்களுக்கு மிகவும் ஆபத்தானநிலையில் உள்ளது. மின்விபத்துகள் ஏற்பட்டால்தான் இவைகள் சரிசெய்யப்படுமா? என்பது பொதுமக்களின் குமுறலாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை போக்கிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2025 7:30 AM GMT
மோகன் | சென்னை
#60470

கழிவுகளால் சுகாதார சீர்கேடு

கழிவுகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் தொழில் பகுதியின் சாலையில் இருபுறமும் குப்பைகள் நிறைந்து பார்க்கவே சகிக்க முடியாமல் சுகாதார சீர்கேடாகி கிடக்கிறது. அதே சாலையில் மாடுகளும் தங்கி தங்களது கழிவுகளை இட்டுசெல்வதால் அந்த பகுதியை அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து தேங்கியுள்ள குப்பைகள், கழிவுகள் அகற்றப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick