Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2026 1:43 PM GMT
மாதையன் | கிருஷ்ணகிரி
#65662

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி சேலம் சாலை, சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, காந்தி ரோடு, பழைய பேட்டை, ஜக்கப்பன் நகர், கோட்டை தெரு ஆகிய பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும். பொதுமக்களும் அவதி அடைகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களை துரத்தி கூட்டமாக சேர்ந்து தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:56 AM GMT
சமூக ஆர்வலர் | செங்கல்பட்டு
#65627

சாலை சரிசெய்யப்படுமா?

சாலை

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள சுரங்கப்பாதை பல மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் அது தற்போது வரை முழுவதுமாக சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குகிறது. வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:55 AM GMT
செல்வம் | செங்கல்பட்டு
#65626

பகலில் எரியும் மின்விளக்குகள்

மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சி, நரசங்குப்பம் கிராமத்தில் தெருவிளக்குகள் பகலிலும் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மேலும் பகலில் எரியும் மின்விளக்குள், சில நேரங்களில் இரவில் எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:53 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#65625

தெருநாய்கள் தொல்லை

சாலை

திருவள்ளுர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கின்றன. மேலும் சாலையில் விளையாடும் குழந்தைகளையும், நாய்கள் துரத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:52 AM GMT
பாலசுப்பிரமணியன் | திருவள்ளூர்
#65624

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதன் சிமெண்ட் பெயர்ந்தும், வயர்கள் இணைப்பில் இருக்கும் கம்பி உடைந்தும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:51 AM GMT
சாமுவேல் | திருவள்ளூர்
#65623

சத்துணவு மையம் அமைக்கப்படுமா?

மற்றவை

திருவள்ளுர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி நூம்பல் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் இருந்த சமயலறை பல மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால் அதனை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மதிய சத்துணவு சமைக்க தேவையான சமயலறை இல்லாமல், மற்றொரு பள்ளியில் சமைத்து எடுத்துவரப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியில் சமயலறை அமைக்க நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:50 AM GMT
சமூக ஆர்வலர் | திருவள்ளூர்
#65622

நடவடிக்கை எடுக்கப்படுமா?

மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அணைக்கட்டுச்சேரி கிராமத்தில், தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். வெயில் காலம் என்பதால், குழந்தைகளும் பெரியவர்களும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:48 AM GMT
ஊர்பொதுமக்கள் | திருவள்ளூர்
#65621

குப்பைமேடு

குப்பைமேடுகுப்பை

திருவள்ளுர், பொன்னேரி தொகுதிகு உட்பட்ட ஆண்டார்குப்பம் பகுதியில் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. அந்த பாதையில் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு குப்பைகள் மலைபோல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. கோவிலுக்கு அந்த வழியாக செல்லும் பக்தர்கள், மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:46 AM GMT
அஜய் | சென்னை
#65620

சேரும் சகதியுமான சாலை

சேரும் சகதியுமான சாலைசாலை

சென்னை திரிசூலம் அம்மன் நகரில் இருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஆங்காங்கே சாலை உடைந்து, சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2026 10:44 AM GMT
சமூக ஆர்வலர், | சென்னை
#65619

சாலையை ஆக்கிரமித்த கடைகள்

சாலை

சென்னை அண்ணாநகரில், சாலைகளை ஆக்கிரமித்து பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைக்கு வருபவர்கள் அவர்களின் வாகனங்களை, சாலையின் ஓரத்திலேயே நிறுத்திவிடுகின்றனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளின் உரிமையாளர்கள் அங்குள்ள மழைநீர் கால்வாயையும் மூடிவிடுகின்றனர். மழைநீரும் அங்கு தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick