Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 March 2026 10:46 AM GMT
சிவா | செங்கல்பட்டு
#63484

ஆக்கிரமித்த செடி, கொடிகள்

ஆக்கிரமித்த செடி, கொடிகள்மற்றவை

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகம் உள்ளது. அதன் எதிர்ப்புறம் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள மாடு அடைக்கும் பட்டியில் பின் பக்கத்தில் செடி,கொடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்கள் இருக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:45 AM GMT
செல்வம் | செங்கல்பட்டு
#63481

தார் சாலை அமைக்கப்படுமா?

தார் சாலை அமைக்கப்படுமா?சாலை

செங்கல்பட்டு மாவட்டம் சிறுநகர் ஊராட்சியில் பெரியகாளக்கடி சாலையில் இருந்து பிலாங்குப்பம் கிராமம் வரை உள்ள சாலை உடைந்து ஜல்லி கற்கள் மட்டுமே உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் கற்கள் அதிகமாக இருப்பதால் நடக்க சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டி ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:44 AM GMT
பாலு | செங்கல்பட்டு
#63480

புகார் எதிரொலி

புகார் எதிரொலிசாலை

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஆபத்தான முறையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் பல மாதங்களாக கவனிப்பாரற்று கிடந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பள்ளியின் எதிரில் ஆபத்தான முறையில் இருந்த சாக்கடை மூடியை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:43 AM GMT
சங்கர் | திருவள்ளூர்
#63479

கொசு தொல்லை

கழிவுநீர்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதிக இடங்களில் செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கழிவுநீரும் ஆங்காங்கே தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கொசு தொல்லையை நீக்க கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:42 AM GMT
அஜய் | திருவள்ளூர்
#63478

சிதலமடைந்த புதிய சாலை

சிதலமடைந்த புதிய சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் இருந்து கொப்பூர் செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. ஆனால் இந்த சாலை தற்போது சிதலமடைந்து தார் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாயைில் செல்லும்போது மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:41 AM GMT
நாகராஜன் | திருவள்ளூர்
#63477

ஆமைவேக பணிகள் முடிவடைவது எப்போது?

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில மாதங்களாக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில சமயங்களில் பஸ் வர தாமதமானால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குவோர்கள் என அனைவரும் வெயிலில் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:40 AM GMT
விமல் | திருவள்ளூர்
#63476

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

சாலையில் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட வண்டலூர் பைபாஸ் - மாங்காடு செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. சில சமயங்களில் மாடுகள் அதனை சாப்பிடுவதால் நோய்வாய்படும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:39 AM GMT
சிவராமன் | திருவள்ளூர்
#63475

குளம் சீரமைக்கப்படுமா?

குளம் சீரமைக்கப்படுமா?தண்ணீர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயில் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி பள்ளி, கோவில், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம குளத்தில் ஆகாய தாமரை மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. செடிகளில் பாம்பு மற்றும் விஷ உயிரினங்கள் இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து செல்லும்போது அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்து தரவேண்டி ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:37 AM GMT
சிவலிங்கம் | சென்னை
#63474

பாலம் அமைக்கப்படுமா?

சாலை

சென்னை அடையாறு மத்திய கைலாஷ் அருகே ஓ.எம்.ஆர் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் பரபரப்பான சாலை. இதன் அருகே ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரிகள் உள்ளன. எனவே இங்கு செல்லும் பொதுமக்களும் மாணவ-மாணவிகளும் இந்த சாலையை கடந்த செல்லவேண்டியுள்ளது. அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால் மக்கள் கடக்க மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை கடக்க நடைமேடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2026 10:36 AM GMT
சுகுமார் | சென்னை
#63473

பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்

பாலத்தில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள்சாலை

சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள எண்ணூர்-எர்ணாவூர் மேம்பாலம் அதிகமான வாகன ஓட்டிகள் செல்லும் மிக முக்கிய பாலம். இந்த மேம்பாலத்தில் துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தில் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றன். சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick