Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2026 12:56 PM GMT
Mr. Raja | சீர்காழி
#64752

வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையம் சந்திப்பில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வாகனங்களில் வருவோர்கள் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் திருமணஞ்சேரி கோவில் மற்றும் பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்வோர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.ஆகயால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், குத்தாலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:48 AM GMT
சுதாகர் | திருவள்ளூர்
#64712

இடையூறான மரக்கிளைகள்

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர், சக்திவேல் நகர் பகுதியில் சாலை ஓரங்களில் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் உள்ள மரக்கிளைகள் சாலையில் இடையூறாக வளர்ந்துள்ளன. இதனால் பெரிய வாகனங்கள் அந்த சாலைகளில் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள மின்வயர்களிலும் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் இடையூறான மரக்கிளைகளை அகற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:47 AM GMT
வேழமுதல்வன் | திருவள்ளூர்
#64711

சமுதாயக் கூடம் திறக்கப்படுவது எப்போது?

சமுதாயக் கூடம் திறக்கப்படுவது எப்போது?மற்றவை

திருவள்ளுவர் மாவட்டம் பஞ்செட்டி ஊராட்சியில் கடந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு நினைவு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட அந்த சமுதாய கூடம் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:46 AM GMT
சூசை | திருவள்ளூர்
#64710

பஸ் ஸ்டாப் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் தினமும் பள்ளி- கல்லூரி, வேலைக்கு என பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் பஸ்கள் சரிவர நிறுத்தப்படுவதில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் மக்கள் பல மணிநேரம் வெயிலில் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் ஸ்டாப் அமைத்துதர அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:45 AM GMT
சண்முகம் | திருவள்ளூர்
#64709

பூங்கா நேரம் அதிகரிக்கப்படுமா?

பூங்கா

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் படகு குலாம் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பொழுதுபோக்குக்காக செல்வது வழக்கம். வெயில் காலம் என்பதால் மாலை நேரங்களில்தான் மக்கள் வருகின்றனர். ஆனால், இந்த பூங்காக்களில் இரவு 8 மணிக்கே மக்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுகிறார்கள். இதனால் பொழுதை கழிக்கவரும் குடும்பங்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்கா மூடப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டி அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:44 AM GMT
சமூக ஆர்வலர் | சென்னை
#64708

அச்சுறுத்தும் மின்வயர்கள்

மின்சாரம்

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பகுதியில் சாலையில் மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்பெட்டி சேதமடைந்து அதில் உள்ள மின்வயர்கள் சாலையில் கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மின்வயர்களை பாதுகாப்பாக அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:43 AM GMT
குணசீலன் | சென்னை
#64707

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலை

சென்னை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பகுதி. இந்த பகுதியில் சமீப காலமாக சாலையில் அதிகமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:40 AM GMT
சாஜித் பாஷா | சென்னை
#64706

காணாமல் போன பெயர் பலகை

காணாமல் போன பெயர் பலகைசாலை

சென்னை அமைந்தகரை அடுத்த ராணி அண்ணாநகர் பகுதியில் தெருப்பெயர் உள்ள பலகை மிகவும் சேதமடைந்து உள்ளது. அதில் பெயர் காணாமல் போன நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் வெளியூர் மக்கள், தபால் ஊழியர்கள், உணவு டெலிவரி ஊழியர்கள் அனைவரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே மாநராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பெயர் பலகையை சரிசெய்ய வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:39 AM GMT
கணேசன் | சென்னை
#64705

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியில், மின்சார வாரியம் மூலம் சாலை அருகே பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் கற்களால் நிரப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிகமான பாதசாரிகள் தினந்தோறும் செல்கின்றனர். இந்த ஆபத்தான பள்ளம் சாலையை கடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2026 6:38 AM GMT
சிவலிங்கம் | சென்னை
#64704

சேதமடைந்த மின்பெட்டி

சேதமடைந்த மின்பெட்டிமின்சாரம்

சென்னை அடையாறு காமராஜர் அவென்யூ 1-வது தெருவில் சாலையில் வைக்கப்பட்டுள்ள மின்பெட்டி கடந்த சில மாதங்களாக சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்பெட்டியை சரிசெய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick