Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 May 2026 2:12 PM GMT
சுரேஷ் | செங்கல்பட்டு
#64081

மறைக்கப்பட்ட பெயர் பலகை

மற்றவை

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள காயரம்பேடு என்ற ஊரின் பெயர் பலகை தனியார் விளம்பர பலகை மூலம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடம் தெரியாமல் சுற்றிதிரியும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்று பெயர் பலகையை மறைக்கும் வகையில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:10 PM GMT
கண்ணன் | செங்கல்பட்டு
#64079

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

செங்கல்பட்டு மாவட்டம், பையம்பாடி கிராமத்தில் உள்ள முக்கிய சாலை மிகவும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:09 PM GMT
ஜெகன் | செங்கல்பட்டு
#64078

பராமரிப்பில்லாத கிணறு

மற்றவை

செங்கல்பட்டு மாவட்டம், பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் கிடக்கிறது. இந்த கிணற்றை சுத்தம் செய்தால் பள்ளியில் உள்ள மாணவ-மாணவியர்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:07 PM GMT
பாலசுப்பிரமணியன் | திருவள்ளூர்
#64077

எப்போது திறக்கப்படும்?

எப்போது திறக்கப்படும்?மற்றவை

திருவள்ளூர் மாவட்டம், திருவூர் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் புதிய குடியிருப்பு கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் முழுமையடைந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் உள்ளது. இதுகுறித்து, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த பகுதி மக்களின் நலன் கருதி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:06 PM GMT
ஜெயராமன் | திருவள்ளூர்
#64076

எரியாத தெருவிளக்கு

எரியாத தெருவிளக்குமின்சாரம்

திருவள்ளூவர் மாவட்டம், பூந்தமல்லி காவல் செறி பிரதான சாலை, குறிஞ்சி நகர், பாலாஜி நகர் போன்ற பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து, பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:04 PM GMT
ஜான் சுந்தர் சிங் | சென்னை
#64075

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

சென்னை விமான நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தின் ஓரங்களில் மண் மற்றும் குப்பைகள் அதிக அளவு தேங்கி கிடக்கிறது. இதனால் இருசக்கரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளிலும் சிக்குகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:03 PM GMT
ராஜன் | சென்னை
#64073

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

சென்னை பெரம்பூரில் பிருந்தா தியேட்டர் செயல்பட்டு வந்த இடம் அருகே சாலையை ஆக்கிரமித்து செடிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் தினந்தோறும் இன்னலை சந்திக்கவேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி சுமூகமான போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:01 PM GMT
சாஜித் பாஷா | சென்னை
#64071

நோய்தொற்று ஏற்படும் அபாயம்

நோய்தொற்று ஏற்படும் அபாயம்குப்பை

சென்னை செனாய்நகர், புல்லா அவன்யூ சாலையில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். சிலர் சிறுநீர் கழிப்பதற்கு அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 2:00 PM GMT
பொதுமக்கள் | சென்னை
#64069

அடிக்கடி மின்தடை

மின்சாரம்

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள கே.கே.டி.நகர், பத்ரகிரி நகர் உள்பட பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெயிலின் தாக்கதால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 1:58 PM GMT
இளையன் | திருவள்ளூர்
#64068

புகார் எதிரொலி

புகார் எதிரொலிமற்றவை

திருவள்ளூா் மாவட்டம், நத்தமேடு பகுதியில் உள்ள செல்வகணபதிநகரில் சாலையில் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினார். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick