Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Dec 2025 1:51 PM GMT
கைலாசம் | மேட்டூர்
#61259

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

ஜலகண்டாபுரம் தாசகவுண்டர் தெருவில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருந்தே வெளியே வர அச்சப்படுகின்றனர். இருச்கர வாகனங்களில் செல்வோரையும், நடந்து செல்வோரையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 11:36 AM GMT
பொதுமக்கள் | அரியலூர்
#61209

நோயாளிகளை அச்சுறுத்தும் தெருநாய்கள்

ட்ரெண்டிங்

அரியலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள், அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை சிகிச்சைக்காக வந்து செல்பவர்களையும், பொதுமக்களையும் கடிக்கப்பாய்கின்றன. மேலும் அவர்களை அச்சுறுத்துகின்றன. இதனால் பெண்கள் பயத்துடனேயே செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:38 AM GMT
அன்பழகன் | செங்கல்பட்டு
#61174

திறந்தவெளி கால்வாயால் விபத்து

சாலை

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட ராணி அண்ணா நகர், 2-வது தெருவில் சாலையின் இருபுறமும் திறந்தவெளி கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. திறந்த நிலையிலேயே காணப்படும் கால்வாய்களால் பல நேரங்களில் மாடுகள் விழுந்து எழ முடியாமல் தவிக்கிறது. அப்பகுதி பொதுமக்களுக்கு ஆபத்தாக உள்ள இந்த திறந்தவெளி கால்வாய்களுக்கு மேல் மூடி அமைக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:36 AM GMT
அன்பழகன் | செங்கல்பட்டு
#61173

தேங்கும் மழைநீரால் தொற்றுநோய்

தேங்கும் மழைநீரால் தொற்றுநோய்கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் ஊராட்சி மேல்மணம்பாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த சாலைகளில் மழைக்காலங்களில் தெப்பக்குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் குறித்த அச்சம் நிலவுகிறது. கிராம மக்களிடையே தொற்று நோய் பரவாமல் இருக்க, சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் புதிய சாலை அமைக்கப்படவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:35 AM GMT
-ஜாண்சன் | செங்கல்பட்டு
#61172

தடுப்பு சுவர் இல்லா கிணறு

தடுப்பு சுவர் இல்லா கிணறுட்ரெண்டிங்

செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் மண்டலம், அனகாபுத்தூர் கிராமம், காரிகாலன் நகர், செங்குட்டுவன் தெருவில் பழைமையான கிணறு ஒன்று உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் நிறைந்து காணப்ப்படும் இந்த நீர் ஆதாரத்தை சுற்றி பாதுகாப்பான தடுப்புசுவர் இல்லாமல் காணப்படுகிறது. சிறுவர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் 'ஆபத்தை' விலை கொடுத்து வாங்கும் நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். கிணற்றினை சுற்றி தடுப்புச்சுவர் அமைத்து, துறைசார்ந்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:33 AM GMT
குமரன் | திருவள்ளூர்
#61171

சாலையில் உலா வரும் மாடுகள்

போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் உலாவரும் இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள். இந்த போக்கை சரிசெய்யவும் உரிமையாளர்களை கண்டறிந்து மாடுகளின் போக்கை முறைபடுத்தவும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:32 AM GMT
சுந்தர் | திருவள்ளூர்
#61170

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் லலிதாஞ்சலி நகர், 1-வது பிரதான சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். பாதசாரிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத அவல நிலையும் நீடிக்கிறது. எனவே இதுதொடர்பான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:30 AM GMT
தயாளன் | திருவள்ளூர்
#61169

வாகன ஓட்டிகள் குழப்பம்

வாகன ஓட்டிகள் குழப்பம்போக்குவரத்து

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் - தாம்பரம் பைபாஸ் சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த வழித்தடத்தில் அம்பத்தூர் செல்லும் வழிதடத்தை காட்டும் பெயர் பலகையை மறைக்கும் வகையில் ஆவடி மாநகராட்சி போலீசாரால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை உள்ளது. இதனால் புதியதாக அந்த பாதையை பயன்படுத்த நினைப்பவர்கள் குழப்பம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அறிவிப்பு பலகையை உடனடியாக அகற்றிட போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:28 AM GMT
நாகராஜ் | திருவள்ளூர்
#61168

கிடப்பில் உள்ள சாலைபணி

சாலை

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், காரணி மற்றும் நிஜம்பட்டு போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை புதியதாக அமைக்கப்பட கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜல்லி, கற்கள் போடப்பட்டது. இருப்பினும் இன்னும் அந்த சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் சிரமத்துடன் செல்கிறார்கள். சாலை பணிகள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Dec 2025 6:28 AM GMT
வெங்கடகிருஷ்ணன் | திருவள்ளூர்
#61167

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரின் மைய பகுதியான பூங்கா நகர்-காக்களூர் பைபாஸ் வரை செல்லும் பிரதான சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதியில் உள்ள அப்பாசாமி சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே பள்ள மேடுகள் காணப்படுவதால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அவதியடைகிறார்கள். மழைக்காலத்தில் தேங்கும் மழைநீரால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கிறது. சாலை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick