மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் நனைந்தவாறும், கோடைகாலத்தில் மரங்களின் நிழலை நாடும் நிலையும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிழற்குடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் 7-வது தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்துகின்றது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள்...
செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நரசங்குப்பம் ஏரி அருகில் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் மூச்சுதிணறல் பாதிப்புகளுக்கு உள்ளாகி, அவ்வபோது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். தொடர்ந்து அரங்கேறிவரும் இந்த அவல நிலையால் பல உயிர்சோதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்த...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பகுதியில் மிகவும் பழுதடைந்தும் சிதிலமடைந்தம் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மேல் பழுதடைந்த நிலையில் இருக்கும் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகத்தை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு கழிவறை வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், கிளாம்பாக்கம் கிராமம் வழியாக செல்லும் அகரம் கண்டிகை இணைப்பு சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருன்றனர். இந்த சாலைதான் ஆயலூர், கோயம்பாக்கம் கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. சேறும் சகதியுமாக காணப்படும் இந்த சாலையால் வாகன ஒட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். பலநேரங்களில் விபத்துகளும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையின் ஓரங்களில் அதிகப்படியான குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் சுகாதாரசீர் கேடு ஏற்படுகிறது. மழைநேரங்களில் அந்த பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிதறியுள்ள குப்பைகளை அகற்றவும், குப்பைகளை போடுவதற்கென தனி குப்பைதொட்டியை வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு, சிருவாபுரி பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். மேலும், இந்த கோவிலுக்கு மினி பஸ் செங்குன்றத்தில் இருந்து மட்டும்தான் இயங்குகிறது. பிராட்வே தங்க சாலை இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வழித்தடத்தில் மினி பஸ் சிருவாபுரிக்கு இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்கி குளம் போலவும் காட்சியளிக்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை மேற்கு நமச்சிவாய புரம் சந்திப்பில் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் தடுப்புகள் உடைந்த நிலையில் உள்ளது. இதை இருச்சகர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடைந்த தடுப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ராமாபுரம், அகஸ்தியர் தெரு, கம்பர்தெரு. பாரதி தெரு ஆகிய தெருக்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகளில் தெருநாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தெருநாய்கள் சாலைகளில் ஆபத்தான முறையில் அங்கும் இங்கும் செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடே செல்லும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.