மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
செங்கல்பட்டு மாவட்டம், கொளம்பாக்கம் 9-வது வார்டில் பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. திடீரென கடந்த 6 மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. தற்போது, இதற்காக அமைக்கப்பட்ட குழாய் இணைப்புகளை பாலாற்று கூட்டுக் குடிநீர் நிர்வாகத்தினர் அடைத்துள்ளனர். இதனால் இங்கு வசதிக்கும் குடும்பத்தினர் குடிநீர் இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் மீண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள மச்சேச பெருமாள் கோவிலின் அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியின் சுகாதாரம் கேள்விக்குறியாகியது. பக்தர்கள் மூக்கை கைக்குட்டையால் மூடி செல்லும் அளவிற்கு மோசமாக நிலை உருவாகியிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள்...
திருவள்ளூர் மாவட்டம், சித்திராஜா கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டி.என்.எச்.பி. குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் கழிவுநீர் கால்வாய் இருக்கிறது. இந்த கால்வாய் பல நாட்களாக மூடாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. கழிவுநீர் கால்வாயில் மூடி அமைக்க வேண்டும் என பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உயிர்சேதம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அரங்கேறுவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட துறை...
திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டூரில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் மயான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு புதர் மண்டி மிகவும் மோசமாக கிடக்கிறது. அங்கு உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. போதிய இடவசதி உள்பட அடிப்படை வசதி முறையாக இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் புதர் மண்டி இருக்கும் மயான சுடுகாடை சீரமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மண்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீர் சாலையில் குளம்போல தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த சாலை வழியாக யாரும் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து, துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம். மணலி புதுநகர் பிரதான மார்க்கெட் சாலை வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் சென்று வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அமைந்தகரை, கான்வெண்ட் தெருவில் சாலை ஓரத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை சுற்றிலும் தடுப்புகள் இல்லாமல் மிகவும் ஆபத்தான முறையில் இருக்கிறது. இதன் அருகில் சிறுவர்கள் பலரும் சென்று விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஓரத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மின்மாற்றியை சுற்றிலும் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை வடபழனி முதல் அரும்பாக்கம் 100 அடி சாலையில் திருநகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் சாலைகள் அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், அவ்வபோது விபத்துகளும் அரங்கேறுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை கிண்டி, மடுவின்கரை பிள்ளையார் கோவில் தெருவில் சாலை ஓரத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி மிகவும் ஆபத்தான வகையில் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், குழந்தைகள் அதிகம் விளையாடும் பகுதி என்பதால் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின் இணைப்பு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் ஏராளமான தெருக்கள் உள்ளது. இதில் சில தெருக்களில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. குறிப்பாக, எக்ஸ் சர்வீஸ்மேன் 2-வது தெருவில் பெயர் பலகை உள்ளது. ஆனால் எக்ஸ் சர்வீஸ்மேன் முதல் தெருவிற்கு பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக வரும் நபர்கள் வழி தெரியாமல் சுற்றி திரியும் அவலநிலை ஏற்படுகிறது. உணவு, பார்சல் கொண்டு வரும் ஊழியர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து இறுதியாக அங்கு வந்தடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய தெரு பெயர் பலகை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க...