மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி எல்லைக்குட்பட்ட பட்டூர், பாத்திமா நகர், இஷாக் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலை அருகில் சிலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும்போது அதிகஅளவு துர்நாற்றம் வீசுகின்றது. எனவே, மாங்காடு நகராட்சி நிர்வாகம் குப்பையை உடனே அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம்-திருநீர்மலை செல்லும் முதன்மை சாலையில் நாகல்கேணி பகுதியில் தினமும் ஏராளமான வாகனகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தேண்டப்பட்டது. அதற்கான பணி முடிந்த பின்னரும் இந்த பள்ளத்தை ஊழியர்கள் சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமபடுகின்றனர். சிலநேரம் சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், திருநீர்மலை சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அதில் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்களாக உள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் இந்த வாகனங்கள் கடந்து செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, தாம்பரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல், பச்சையம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் நுழைவு வாயிலின் முன்பு கழிவுநீர் தேங்குவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்றி, இந்த பகுதியை சுத்தமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், பெரிய கோலடி சாலை மற்றும் அம்பத்துார்-ஆவடி-திருவேற்காடு செல்லும் சந்திப்பு சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செல்லும் சாலை என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம், மோரை நியூ காலனி பிரதான சாலையில் சிலர் மீன்கடைகள் வைத்துள்ளனர். மீன்களை சுத்தம் செய்யும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சாலையில் தேங்கி இடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் கொசு தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, சின்னகளக்காட்டூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின்விளக்குகள் இருந்தும் எரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக பொதுமக்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, ஊராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் பெண்கள் கல்லூரிக்கு தினமும் ஏராளமான மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த கல்லூரிக்கு அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடி இல்லாமல் திறந்து உள்ளது. இதனால் பள்ளம் தெரியாமல் அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழும் அபாயம் இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயுக்கு மூடி அமைக்க வேண்டும்.
சென்னை திருமுல்லைவாயில், பச்சையம்மன் கோவில் அருகில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேர பணி முடிந்து வருபவர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். குறிப்பாக, அந்த பகுதி வழியாக வருபவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னையை அடுத்த மகாபலிபுரம்-திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ்கள் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை உடனே பழைய முறைபடி இயக்க போக்குவரத்துத்துறை முன்வர வேண்டும்.