மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நரசங்குப்பம் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் தடம் எண் 60 என்ற பஸ் பேருந்து நிலைத்திற்கு உள்ளே வராமல் செல்கிறது. இதனால் பஸ் நிலையம் உள்ளே அந்த பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதில் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னக் களக்காட்டுர் கிராமத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு சுற்று சுவர் இல்லாததால் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும், இரவு நேரங்களில் மதுகுடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேமிப்பு கிடங்கிற்கு புதிய சுற்று சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி ஜே.பி. எஸ்டேட் பகுதியின் 4-வது குறுக்கு தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த தெருவில் சாலை இல்லாததால் மழைக்காலங்களில் மழை நீர் மண் சாலைகளில் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி கீழ் அயனம்பாக்கம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதுமான மருத்துவ வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்காக பல தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் ரெயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் ரெயில் நிலையம் வரும் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய்களை சரிசெய்யவார்களா? என ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர் பிரதான சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் மசூதி முதல் வைகுண்டர் கோவில் வழியாக ஆண்டாகுப்பம் கூட்டு ரோடு வரையில் பல வேகத்தடைகள் வர்ணம் பூசாமல் இருக்கின்றன. அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த அச்சத்துடனே செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதுகுறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் பகுதியிலிருந்து தாம்பரம் செல்லும் தடம் எண் 66-பி பஸ்சினை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென அந்த பஸ் ஆழ்வார் திருநகர் பகுதிக்கு வராமல் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சில கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்சினை மீண்டும் ஆழ்வார் திருநகர் வரை இயக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை குமணன்சாவடியில் இருந்து எம்.ஜி.ஆர். மெடிக்கல் கல்லூரி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போருர் அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வாகன ஒட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை செனாய்நகர், தமிழர் நகரில் இருக்கும் மின்சார பெட்டி ஒன்று தரையோடு ஒட்டியவாறு சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான முறையில் உள்ளது. அதன் மூடி துரு பிடித்து சேதமடைந்துள்ளது. மழைக்காலங்களில், இதுபோன்ற நிலையால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் சிமென்ட் தளம் அமைத்தும் துருபிடித்த மின்பெட்டியின் மூடியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.