மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி முக்கூடு சாலையில் நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் (பேரிகார்டு) அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பட்டுக்கோட்டை
காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாச நகரில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும், இதில் கொசு அதிக அளவு உற்பத்தியாவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட துறை அதிகாரிகள் குப்பை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமம் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. அந்த குட்டை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் குட்டைக்கு வடிந்து செல்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குட்டை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்...
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலபாக்கம் கிராமம் வள்ளுவர் நகர் முதல் தெருவில் மண் சாலை உள்ளது. அந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வெளியே செல்லும் பெரியவர்கள் என அனைவரும் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண் சாலையை, தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், கன்னிவாக்கம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையை மாத்தில் 6 நாட்கள் மட்டும் திறக்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை சரியாக விநியோம் செய்வதும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். மாதம் தோறும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரேஷன் கடையை மாதம் 12 நாட்கள் திறக்கவும், அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர், சிவசக்தி நகர் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 7-வது அவென்யூ பகுதியில் சாலை அமைக்கும் பணி நடந்தது. தற்போது இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் சாலை இல்லாமல் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஒரு பகுதியில் மட்டும் போடாமல்...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர், நந்தியாம்பாக்கம் எம்.சி. நகர் தெருவில் சாலை வசதி இல்லை. இதனால் இந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மழை காலங்களில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம், ராஜீவ் காந்தி தெரு தனியார் பள்ளி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் அதிகமான விரிசல்கள் காணப்படுகிறது. மேலும், தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் மின்கம்பம் விழுந்து விடுமே என அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆபத்தை அறிந்து மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை இந்திராநகர் ரெயில் நிலையம் அருகில் இருந்த பஸ் நிறுத்தம் சாலை விரிவாக்கம் செய்யும் போது அகற்றப்பட்டது. விரிவாக்க பணி முடிந்த பின்னரும் பஸ் நிறுத்தம் நிறுவப்படவில்லை. இதனால் கானகம், களிக்குன்றம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை சூளைமேடு, கான் தெருவில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்அடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்சு வரவும் சிரமமாக உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.