மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் பையம்பாடி கிராமத்தில் உள்ள பல மின்கம்பங்கள் சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சியளிக்கிறது. அந்த மின்கம்பங்கள் கீழே விழுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டு கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பேரி பகுதியில் ரெயில்நிலையம், தீயணைப்புநிலையம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் போன்ற நிகழ்வுகள் நடைபேறும் அச்சத்துடனே மக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கவேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரிய களக்காட்டூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து அதன் சுவர் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்தக் கட்டிடம் பெரிய களக்காட்டூர் சின்ன களக்காட்டூர் மற்றும் ஜே.எஸ்.ராமாபுரம் ஆகிய மூன்று கிராமங்கள் மக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலக கட்டிடத்தை சரிசெய்து தரவேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் வேணு கோபால்சாமி கோவில் தெருவில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. குழந்தைகள் அங்கன்வாடி மையம் மற்றும் அங்குள்ள கோவில் பகுதிகளில் இரவில் மர்ம நபர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்கலை அங்கேயே போட்டுவிடுகின்றனர். இதனால் அங்கு குழந்தைகள் வர முடியாமலும், பொது மக்கள் முகம் சுழிக்கும்படியும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே, பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் பாதை சாலை பராமரிப்பு இன்றி மண்பாதையாக உள்ளது. மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரெயில் பணிகள் அந்த வழியாக செல்ல முடியாக நிலை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் அகத்திய நகர் 2-வது தெருவில் மின் கம்பத்தில் உள்ள வயர்கள் தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளது. இதனால் காற்று பலமாக வீசும்போது ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி வருகிறது.இந்த பகுதியில் சிறுவர்கள் அருகில் விளையாடுவார்கள். பொதுமக்கள் அச்சத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சரி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை வேளச்சேரி ஐ.ஐ.டி கேட் ௨ள்ள சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் சாலை வளைந்து செல்வதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால் வளைவு பகுதியில் விபத்து ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
சென்னை கிண்டி, ரேஸ் வியூவ் காலனியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சாலையில் உள்ள நடைபாதைகள் மிகவும் சிதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் அவதியடைகின்றனர். நடைபாதை சேதமடைந்து உள்ளதால், அதில் தடுமாறி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைக்கவேண்டும்.
சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக ஏராளமான வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதியில் சில சமயம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் செல்லும் மக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை ராமாபுரம், பாரதி சாலையில் உள்ள கல்லூரி முன்பு சாலையில் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.