மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
புதுவை சாரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு அழகுக்காக செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில மாதங்களால் செயல்படாமல் காட்சி பொருட்களாக உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், ஓரத்தியிலிருந்து கீழ் செம்பேடு கிராமத்துக்கு செல்லும் சாலை நீண்ட காலமாக சேதடமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும், இந்த சாலையில் வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு திருவள்ளூர் சாலையில் உள்ள தெருவிளக்குகள் கடந்த 2 மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பாம்புகள், விஷப்பூச்சிகள் செல்லும் என்ற அச்சத்தில் பெண்கள், குழந்தைகள் என யாரும் வெளியில் செல்வதில்லை. மேலும் இதனை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி பஞ்சாயத்திற்குட்பட்ட நரசங்குப்பம் பகுதயில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். நெய்குப்பி பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகளை நரசங்குப்பம் பகுதயில் உள்ள ஏரி அருகில் கொட்டி தீ வைத்து எரிகின்றனர். இந்த பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி உள்ள வயதானோர், குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கின்றனர்....
திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம், திருவேற்காடு சாலையின் அருகில் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாய் ஓரத்தில் தடுப்பு சுவர் எதும் இல்லாமல் திறந்த வௌியில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை அருகில் உள்ள கால்வாய்க்கு தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயனிகள் வந்து செல்கின்றனர். இங்கே ஏ.டி.எம். வசதி இல்லாததால் பயணிகள் அவசரத்திற்கு பணம் எடுக்க பல தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரத்தை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், புழல் கிராண்ட்லையன் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. பொதுமக்களின் தேவைக்காக இந்த பகுதியில் ஒரு பொதுகழிப்பிடம் உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே ஊராட்சி மன்ற நிர்வாகம் பழைய கழிப்பிடத்தை புதுபிக்கவோ அல்லது புதிய கழிப்பிடத்தை அமைக்கவோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அண்ணா ஆர்ச் அருகில் உள்ள சாலையில் மழைநீர் கால்வாய்கள் உள்ளது. இதில் கழிவுநீர் கலப்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீர் மழைநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை குரோம்பேட்டை, திருநீர்மலை பகுதியில் பாலாறு குடிநீர் குழாய் உள்ளது. இதில் ஏற்பட்ட உடைப்பால் அதிகளவு குடிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தண்ணீர் சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே, சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வபர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது பிரதான சாலையில் உள்ள தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆனால் இந்த தெருவிற்கு பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் புதிதாக அந்த பகுதிக்கு வருபவர்கள் விலாசம் தெரியாமல் அலைந்து திரியும் நிலை உள்ளது. எனவே, இந்த தெருவிற்கு உடனடியாக பெயர் பலகை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.