மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
காஞ்சீபுரம் மாவட்டம், கந்தன்சாவடி எம்.ஜி.ஆர்.சாலை பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இந்த பகுதி உள்ள நடைபாதை வழியாக தினமும் ஏராளமான பயணிகள் நடந்து சென்று கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நடைபாதை சேதமடைந்து மிகவும் ஆபத்தான முறையில் உள்ளது. இதன் வழியாக செல்லும்போது பொதுமக்கள் தவறிவிழும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சீபுரம் மாவட்டம், வட்டாட்சியர் வளாகத்தில் ஆந்திரசன் பள்ளி, சார் பதிவாளர் அலுவலர்கள், சப் சிறை, கோர்டு, தீயணைப்பு நிலையம், தபால் நிலையம் ஆகிய அலுவலகங்கள் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் தினமும் வந்து செல்கிறார்கள். அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் வட்டாட்சியர் அலுவலகம் வெளியே சென்று ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து வர வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனுக்காக வட்டாட்சியார் அலுவலக வளாகத்தில் ஏ.டி.எம்.எந்திரம் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க...
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல பயணிகள் நடை மேம்பாலம் உள்ளது. அதில் 3-வது நடைமேடையில் இருந்து பயணிகள் நடை மேம்பாலத்திற்கு செல்வதற்கு உள்ள படிகட்டு பகுதியில் உள்ள இரும்பு கைப்பிடி சேதமடைந்து உள்ளது. இதனால் வயதானவர்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளின் நலன் கருதி ரெயில்வே...
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி திருவள்ளுவர் தெருவில் தினமும் ஏராளமான மக்கள் இருசக்கர வாகனத்திலும், நடந்தும் சென்று வருகின்றனர். அந்த பகுதி மக்கள் இந்த சாலை ஓரத்தில் அதிக அளவு குப்பை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையை கடந்து செல்லும்போது அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை மூடி கொண்டு செல்கின்றனர். எனவே, நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க...
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சி பல்லவன் நகரில் தெருக்களில் கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அந்த தெருவில் வழியாக மற்றொரு தெருவிற்கு மக்கள் செல்லும்போது மூக்கை மூடி கொண்ட செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிளிக் கோடி கிராமத்தில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் குழந்தைகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவகை்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, அயனம்பாக்கம் பகுதி ஐஸ்வர்யா நகரில் சாலை மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், சாலையில் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே அந்த சாலைகளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, லெட்சுமிபுரம் ரோட்டில் வெள்ளை பிள்ளை நகர் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் தோண்டப்பட்ட பள்ளங்கள் கம்பிகளுடன் ஆபத்தான முறையில் உள்ளது. இந்த ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர் மற்றும் இந்த தெருவில் பள்ளி செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றது. எனவே, ஆபத்தை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, சென்னீர்குப்பம் வி.ஜி.என்.மெயின் ரோட்டில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பம் சரியாக பராமரிக்கப்படாததால் சிதலமடைந்து உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. மின்கம்பத்தில் அதிகமான விரிசல்கள் காணப்படுகிறது. மேலும், தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் மின்கம்பம் விழுந்து விடுமே என அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆபத்தை அறிந்து மின்வாரிய அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம், கொட்டாமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாடுவதற்கான மைதானம் மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ளதால் மாணவர்கள் விளையாட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, பள்ளி கல்வித்துறை அரசு பள்ளி மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.