மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
திருச்சி மாவட்டம் கிராப்பட்டி அன்பு நகரில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை தெருநாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் தெருநாய்களால் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால்...
சென்னை அடையாறு பகுதியில் காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த இடம் மூன்று பக்கம் கொண்ட வளைவு சாலை என்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் தவறி விழுகின்றனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் துறைசார்ந்த அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சரி செய்து விட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த துறை அதிகாரிகளுக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் தேசமுத்து மாரியம்மன் தெரு உள்ளது. இந்த தெருவில் மின்விளக்கு இல்லாததால் அந்த பகுதிகள் மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்கள் நடக்கியது. எனவே, பெண்கள் இந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளை அச்சுறுத்துகின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சமூக ஆர்வலர், கிருஷ்ணகிரி.
சென்னை சூளைமேடு நெடுஞ்சாலையில் தாஜ் பேலஸ் மற்றும் கனகதாரா நாராயணத்திரி என்ற 2 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 24 மணி நேரமும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடப்படுகிறது. இரவு பகலாக செயல்படும் விளையாட்டு அரங்கில் வீரர்களின் சத்தம் மற்றும் சக்திவாய்ந்த ஒளி விளக்குகளால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, படிக்கும் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள் ஓய்வெடுக்க...
திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூர் ரெயில்வே மேம்பாலத்தில் தினமும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. ஆனால், இந்த மேம்பாலத்தில் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் அவதிபடுகின்றனர். மேலும் இப்பகுதியில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி வாகன ஓட்டிகள்...
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பைபாஸ் சாலையின் ஓரங்களில் அதிகப்படியான குப்பைகள் ஆங்காங்கே சிதறி சுகாதாரசீர் கேடாக கிடக்கிறது. இதனால் மழைநேரங்களில் அந்த பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சிதறியுள்ள குப்பைகளை அகற்றி குப்பைகளை போடுவதற்கென தனி குப்பைதொட்டியை வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் மணலி மண்டலத்தின் மாத்தூர் பகுதியின் 106-வது தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் எவ்வித பாதுகாப்பு அரண்களும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி புதர் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்கு விளையாடும் குழந்தைகளுக்கும், கால்நடைகளுக்கும் அபாயமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பு அரண்களை அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட குமணன்சாவடி பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கும்படி குமணன் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள டிரைவர் தெருவில் ரேஷன் கடையும், மற்றொரு பக்கம் கவுன்சிலர் அலுவலகமும் உள்ளது. இப்பகுதியில் தினமும் இரவில் மதுபானம் அருந்துவது போன்ற முகம் சுழிக்க வைக்கும் விதமான செயல்கள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள் பயத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.