மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
புகை மூட்டதால் அவதி அவினாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் உரக்குழி என்ற பெயரில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அனைத்தும் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் அணையா விளக்காக உள்ளன, இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்கிறார்களா? இல்லையா? என்று தெரியவில்லை. புகை மூட்டத்தால் சுற்றுப்பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஹீம்...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் தச்சர் கூட்ரோடு சாலை அருகில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகர் தெருவின் பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிக்கு புதிதாக வரும் பொது மக்களுக்கு தெருவின் பெயர் தெரியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுபோன்று பெயர் பலகைகளில் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதிக்கு புதிய பெயர் பலகை அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இருக்கைகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த பஞ்செட்டியில் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கோவிலில் அமைந்துள்ள குளம் சரியாக பராமரிக்கபடாமல் உள்ளது. இதனால் குளத்தில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குளத்தை சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம், சிட்கோ நகர் 4-வது பிரதான சாலை மற்றும் நடைபாதை பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. சாலைகளின் இருபுறமும் பல கடைகளை வைத்து ஆக்கிரமிக்க பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத அவலநிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறைஅதிகாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வண்டி கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அலமாதி ஊராட்சியில் மின்மாற்றி உள்ளது. இதில் அடிக்கடி பழுதி ஏற்படுவதால் தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இந்தப்பகுதியில் மகப்பேறு சுகாதார மருத்துவனை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மின்தடை ஏற்பட்டதும் புகாா் அளித்தால் மின்வாரிய துறை ஊழியர்கள் காலதாமதமாக வந்து சரிபார்க்கின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை மயிலாப்பூர், ரெயில் நிலையத்திற்கு பின்புறம் ஒரு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையில் குடிகாரர்கள் மதுவை வாங்கி வந்து, ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து குடிக்கிறார்கள். மேலும் காலி பாட்டில்களை நடு ரோட்டிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகரில் பஸ் டிப்போ ஒன்று உள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் பஸ் டிப்போவிற்கு உள்ளே செல்லாமல் சாலையில் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் பேருந்து நிற்குடை இல்லாமல் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ் டிப்போவை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அடையாறு பகுதியில் வண்ணாந்துறை, சாஸ்திரிநகர், பெசன்ட் நகர், வெங்கட்ரத்தினம் நகர், எல்லையம்மன் கோவில் தெரு, ஆகிய இடங்களில் சாலை போடுவதற்காக சாலையில் தோண்டும் பணி நடைபெற்றது. கடந்த ஒரு மாதம் ஆகியும் இதுவரை சாலை போடப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.