மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி பூராசாமிதோப்பு பகுதியில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராமநாதபுரம் நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவக கட்டிட மேற்கூரை பழுதடைந்து உள்ளது.எனவே சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் டி.எச் சாலையில் வேகத்தடை மிக உயரமாகவும் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. எனவே மின் விளக்குகள் மற்றும் வேகத்தடையை சீர்செய்து வேகத்தடைக்கு வண்ணம் பூசுவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட மேல் அயனம்பாக்கம், செட்டி 3-வது குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள், தபால் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே புதிய பெயர் பலகை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மார்கெட் சாலையில் கழிவுநீர் வெளியேறி குளம் போல காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் ஏற்படுகிறது. எனவே சுகாதார துறையினர் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஓட்டேரி, பிரிக்கிலின் சாலை சேதமடைந்து மேடும்,பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
சென்னை அடையாறு, இந்திரா நகர் 11-வது தெருவில் கழிப்பறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் கழிப்பறை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமப்படுகிறார்கள். எனவே மநகராட்சி நிர்வாகம் கழிப்பறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அரும்பாக்கம், அமராவதி நகர் 2-வது கிழக்கு குறுக்கு தெருவில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதி இல்லை. இதானல் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சாலையில் முழுவது குளம் தேங்கி காணப்படுகிறது. பள்ளி அருகே இருப்பதால் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மழைநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சென்னை பாலவாக்கம், காமராஜர் சாலை குடிநீர் குழாய்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் பள்ளமாக உள்ளது. பள்ளி அருகே இருப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.மேலும் பாதசாரிகள் தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு, சுந்தராபுரம் 2-வது தெருவில் மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் அபாயகரமாக காட்சியளிக்கிறது. மேலும் மின் வயர்கள் வெளியே தெரியும்படி இருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.