மின்சாரம்
குப்பை
பூங்கா
சாலை
கழிவுநீர்
போக்குவரத்து
தண்ணீர்
மற்றவை
செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சிக்குட்பட்ட உலகாத்தம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களிலும் தெரு விளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மேலும சில சமயங்களில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. சம்பந்தப்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மேட்டுத்தனால் கிராமத்தில் பழமையான குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. ஆனால் இந்த கிணறு தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. மேலும் கிணற்றுக்குள் குப்பைகள் வீசப்பட்டு செயல்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணறை சீரமைத்து தரவேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் ஹரிச்சந்திராபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகில் கழிவு நீர் கால்வாய் இருப்பதால், துர்நாற்றம் வீசிவதோடு குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பஸ் நிறுத்தம் அருகே திறந்தவெளி கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அதில் குப்பைகளும், பிளாஸ்டிக் பைகளும் வீசப்படுவதால், அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பகுதியில் மக்கள் குப்பைகளை சாலையில் ஓரத்திலேயே வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில சமயம் காற்றில் குப்பைகள் சாலையில் பறக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ராணுவ சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை போரூர், ராமச்சந்திரா ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ் நிறுத்தம், நிழற்குடை இல்லாமல் இருக்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள், வெயிலிலும், மழையிலும் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருந்து அசோக் நகர் நோக்கி செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
சென்னை அண்ணாசாலை பின்னி சாலையில் எப்போதும் பரபரப்பான சாலை. இதன் அருகே கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதால், பொதுமக்களும், கல்லூரி செல்லும் மாணவிகளும் அந்த சாலையின் நடைபாதை வழியாக நடந்து செல்கின்றனர். ஆனால் சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லவேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சென்னை திருவான்மியூர், ராஜாஜி நகர் 2-வது தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் அமைக்கப்பட்டது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் வடிகால் இணைப்பு வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை ஏற்று கழிவுநீர் வடிகால் இணைப்பு அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.