Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 Aug 2025 5:34 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58410

விதிகளை மீறும் வாகனங்கள்

போக்குவரத்து

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் வழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஆங்காங்கே விபத்துகள் நடந்ததும், காவல்துறை விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதையன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:33 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58409

வாகன ஓட்டிகள் அவதி

மற்றவை

பென்னாகரம் பஸ் நிலையம் ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு கடந்த 3 மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் இடத்தில் மழைநீர் வெளியேற்றுவதற்காக சிறிய அளவில் குழிகள் தோண்டப்பட்டது. அதற்கு முறையான மாற்று வசதிகள் செய்யாததால் பஸ் நிலையம் உள்ளே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றன. எனவே பஸ்கள் நுழையும் இடத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அருண்குமார், ரங்காபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:32 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58408

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலைய போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் உரிய சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். -ராம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:30 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58407

ஆபத்தான பள்ளம்

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்க சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் கடந்த சில மாதங்களாக பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. இந்த பள்ளத்தை சீரமைக்க பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே இந்த பகுதியில் விபத்து நடக்கும் முன்பே இந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். -முனிரத்தினம், ஜக்க சமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:22 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58237

கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் கோரிமேட்டில் அரசு மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான பஸ்கள், சேலம் பழைய பஸ் நிலையம் முதல் கல்லூரி வரை இயக்கப்படவில்லை. எனவே இங்கு பயின்று வரும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று வர பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேணடும். -பழனிவேல், புளியம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:21 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58236

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

ஓமலூர் அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி 10-வது வார்டு தே.கொல்லப்பட்டி அருந்ததியர் தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் தற்போது அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். -புகழ், தே.கொல்லப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:20 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58235

தெருவிளக்கு எரிவதில்லை

மற்றவை

சேலம் 4 ரோட்டில் இருந்து மிதிலா சாலை செல்லும் வழியில் உள்ள தெருவிளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:19 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58233

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை நடைபெற உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள சுற்றுப்புற பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகில் மற்றும் சுப்ராயன் ரோட்டில் உள்ள 5 வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் காணப்படுகிறது. எனவே அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும். -சசிராஜன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 7:28 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58232

சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர்

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூரில் உள்ளது ரேகா காலனி. இந்த காலனியின் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையில் கழிவுநீர் செல்கிறது. இந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், ரேகா காலனி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:16 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#58229

மரக்கிளைகளை வெட்டி அகற்றப்படுமா?

மற்றவை

ஏற்காடு அண்ணா பூங்காவில் இதுபோன்று அடிக்கடி மரக்கிளைகள் முறிந்து விழுந்து விபத்து நடப்பது வாடிக்கையாக உள்ளதாக அருகிலுள்ள வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஏற்காடு அண்ணா பூங்கா பகுதியை சுற்றி ஏராளமான காய்ந்த பட்டுப்போன மரங்கள் இருப்பதாகவும் அடிக்கடி இது போன்று முறிந்து விழுவதால் சுற்றுலா பயணிகள் அஞ்சுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காய்ந்த, பட்டுப்போன மரங்களை அகற்றிட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:13 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58225

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை காரவள்ளியில் தொடங்குகிறது. அங்குள்ள ஒரு மின் கம்பம் அருகில் மூங்கில் குத்துகள் காணப்படுகிறது. அதன் வழியே தாழ்வாக மின்சார ஒயர்கள் செல்கிறது. இந்த நிலையில் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் காணப்படுகிறது. எனவே மின்சார ஒயர்களால் பாதிப்பு ஏற்படாத வகையில் மூங்கில் குத்துகளில் அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜன், காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:12 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58224

குடிநீர் வீணாகுகிறது

தண்ணீர்

வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மற்றும் காவல் நிலையம் அருகே பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது. இதனால் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து உடைந்த குழாயை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -ஆதவ், வெண்ணந்தூர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick