Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2025 2:43 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#59290

மதுபிரியர்களின் கூடாரமான நடைபாதை

மற்றவை

ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் ஏரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த பாதையை இப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களாகவே இங்குள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பாதையில் மின் விளக்குகள் இல்லாததால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே நடைபாதையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:41 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#59289

விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம் மாநகரத்தில் ஓடும் தனியார் டவுன் பஸ்கள், அரசு தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்கின்றன. அதேபோல் அயோத்தியாப்பட்டணம், அம்மாபேட்டை ரவுண்டானா, சின்னகடை வீதி, கடைவீதி, வள்ளுவர் சிலை வரை அதி ஒலி எழுப்பும் ஹாரன்களை அடித்துக்கொண்டு பஸ்கள் வேகமாக செல்கின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து போலீஸ் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:41 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#59288

மின்விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் குள்ளானூர் அருகே ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தில் நான்கு புறவழிச்சாலைகளாக பிரிகிறது. இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக பெண்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே ஆலமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். -சசிகாந்த், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:39 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#59287

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

எடப்பாடி நகரம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி. இதனால் அந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள், கார்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் செல்வதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி எடப்பாடி நகரத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சூர்யா, எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:24 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59285

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல்லில் திருச்சி சாலை வகுரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்விழாநகர் பகுதியில் இருந்து கங்காநகர் செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த இணைப்பு சாலையை ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலை தற்போது சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் சிறு,சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:11 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59280

தடு்ப்பு சுவர் ஏற்படுத்தப்படுமா?

மற்றவை

மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் அடுத்துள்ள தனியார் எடைநிலையம் அருகே சாலையோரத்தில் போர்வெல் குழாய் இணைப்பு ஒன்று உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் தற்போது சாலை அகலப்படுத்தும் பணியின் போது சாலை ஓரத்தில் உள்ளது. எனவே அதற்கு தகுந்த பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும். தார் சாலையை ஒட்டிய நிலையில் அந்த போர்வெல் உள்ளதால் அருகிலேயே பாலம் ஒன்று உள்ளது. புதிதாக வருபவர்களுக்கு போர்வெல் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு சுவர் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:09 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59279

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் சுற்றித்திரிகின்றன. மேலும் தனியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுவது போன்று அந்த தெருநாய்கள் பாய்ந்து வருவதால் அவர்கள் வீதிகளில் நடமாட பீதி அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் ெதருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அவற்றிற்கு கருத்தடை செய்திடவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:08 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59278

பயணிகளுக்கு இடையூறு

போக்குவரத்து

நாமகிரிப்பேட்டை அருகே பட்டணம் முனியம்பாளையம் ஊராட்சி மூலக்காடு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தின் முன்பு பயணிகளுக்கு இடையூறாக அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு அந்த வழியாக பஸ் வருவது தெரியாமல் பரிதவிக்கின்றனர். இதனால் அந்த விளம்பர பதாகைகளை தாண்டி சாலையில் வந்து பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எனவே வருங்காலத்தில் பயணிகள் நிழற்கூடத்தை மறைத்து விளம்பர பதாகைகள் வைப்பதை தடுப்பதுடன், நிகழ்ச்சி முடிந்து பலநாட்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:07 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#59277

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலை

கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் பூந்தோட்டம் எனப்படும் பகுதியில் சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்கு மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலை பகுதியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:56 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#59276

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

பென்னாகரம் அருகே சத்தியநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் முழுவதும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மின்கம்பம் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏற்கனவே அந்த மின்கம்பத்தின் அருகே விவசாயி ஒருவர் மாடு மேய்க்கும்போது மின்சாரம் தாக்கி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:55 PM GMT
Mr.Mohan | அரூர்
#59275

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து அம்மாபாளையம், தோழனூர், மெணசி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை 10பி என்ற டவுன் பஸ் காலை 8 மணி, மாலை 4 மணி அளவில் இயக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பயனடைந்து வந்தனர். தற்போது அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்தப்பட்ட 10பி பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -வெங்கடாசலம்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 1:54 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#59274

மதுப்பிரியர்களின் கூடாரமான நூலகம்

மற்றவை

மாரண்டஅள்ளி அடுத்த கோணம்பட்டி கிராமத்தில் நூலகம் உள்ளது. தற்போது இந்த நூலக கட்டிடத்தில் மது அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் பாட்டில்களை உடைத்து சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த பகுதியில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். -கார்த்திக், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick