Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 11:58 AM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59411

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் சூரமங்கலம் மண்டலம் 21-வது வார்டில் பெரியார் நகர் உள்ளது. இந்த பகுதியில் வாரத்திற்கு 3 முறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அவ்வாறு குடிநீர் வரும்போது இந்த பகுதியில் உள்ள சிலர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி பிடித்து கொள்கிறார்கள். இதனால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தொிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் மோட்டார் மூலம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:52 AM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59388

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பழைய சூரமங்கலம் செல்லும் தார்சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கியாஸ் லைன் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சாலை சீரமைக்கப்படவில்லை. இந்த சாலையில் தான் ஏராளமான பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் கனரக வாகனங்களும் அதிகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடு்த்து சாலையை சீரமைக்க முன்வருவார்களா? -பொதுமக்கள், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:52 AM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#59387

செல்போன் கோபுரம் அவசியம்

மற்றவை

தம்மம்பட்டி அருகே பச்சைமலையில் 36 கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராம பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் பதிவு செய்ய செல்போன் கோபுரம் இல்லாததால் டவர் கிடைக்காமல் ஒவ்வொரு மலை கிராமமாக அதன் பணியாளர்கள் செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் அரசு செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -தருண், தம்மம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:51 AM GMT
Mr.Mohan | ஓமலூர்
#59386

பாதுகாப்பு வேலி தேவை

மற்றவை

தாரமங்கலம் நகராட்சி ஊர் சாவடியை ஒட்டி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் சொசைட்டிக்கு உட்பட்ட இடத்தில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியானது மெயின் ரோட்டை ஒட்டி உள்ள வளைவு சாலையில் உள்ளதால் இரவு நேரத்தில் குழி இருப்பது தெரியவில்லை. மேலும் அருகில் சாக்கடை கால்வாயும் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவில் சாக்கடை கால்வாய் இருப்பதும் தெரியவில்லை. இந்த இடத்தில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அல்லது பாதுகாப்பு வேலி அமைத்துக்கொடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:50 AM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59385

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

சேலம் வடக்கு அஸ்தம்பட்டி, சின்னதிருப்பதி, கலெக்டர் அலுவலகம் உள்பட மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் முதியவர்கள், மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -மதன், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:49 AM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59384

சேறும், சகதியுமான சாலை

சாலை

கந்தம்பட்டி அருகே உள்ள மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் ஏராளமான குடோன் மற்றும் கேஸ் கம்பெனிகள் உள்ளன. இதனால் தினசரி ஏராளமான லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை மண் சாலையாக இருப்பதால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராமச்சந்திரன், கன்னங்குறிச்சி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:47 AM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#59383

பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சி கூடம்

மற்றவை

பள்ளிபாளையம் தாஜ் நகர் பகுதியில் அரசு சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த உடற்பயிற்சி கூடம் சரியான பராமரிப்பு இல்லாமல் உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன. மேலும் இந்த பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சி கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே இந்த கூடத்தை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அருள், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:47 AM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59382

சாக்கடை கால்வாய் மூடப்படுமா?

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் மணியனூர் ஊராட்சிக்குட்பட்ட தெருக்களில் சமீபத்தில் சாக்கடை கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் அவை தகுந்த முறையில் சிமெண்டு சிலாப்புகளை கொண்டு மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த கால்வாயில் அவர்கள் விழுந்து காயம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சேதமடைந்த இந்த தெருக்களின் சாலைகளில் மழைநீர் தேங்குவதாகவும் இப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:46 AM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#59381

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

சேந்தமங்கலம் அருகே உள்ள ராமநாதபுரம் புதூர் வழியாக கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளிக்கு செல்லும் பிரதான சாலை செல்கிறது. மழை பெய்யும் போது இந்த சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பகுதியில் தற்போது புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. குளம் போல் தேங்கும் மழை நீரால் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் மீது தண்ணீர் தெரிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:45 AM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59380

பொதுமக்கள் அவதி

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த அளவாய்ப்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை பதிவு செய்யவும், மேலும் சில காரணங்களாலும் அவர்கள் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பொருட்கள் வாங்கும் நிலையை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வம், அளவாய்ப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:44 AM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59379

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

நாமக்கல் மாநகரை சுற்றிலும் புறவழிச்சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி கூலிப்பட்டி பகுதியில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்திற்கு அருகில் மழைநீர் வெளியேறும் வடிகால் சிறியதாக இருப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 2:44 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#59291

தெருநாய் தொல்லை

மற்றவை

சேலம் சங்கர் நகர், மேயர் நகர், ராஜாராம் நகர் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடிக்க துரத்துகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சாலைகளில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு பணி முடிந்து வாகனங்களில் வீட்டிற்கு செல்பவர்களை அவைகள் துரத்துகின்றன. அப்போது அவர்கள் வாகனங்களில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick