Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2025 3:30 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59606

சாலையில் தேங்கும் மழைநீர்

கழிவுநீர்

ஓசூரில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகே மிகவும் பழமையான பண்டாஞ்சநேயர் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன ஷோரூம்கள், கடைகள் தனியார் வங்கிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கோவிலின் எதிரே சர்வீஸ் சாலையில் மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:29 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#59605

வேகத்தடைக்கு வர்ணம்

சாலை

பர்கூர் எமக்கல்நத்தம் தார்சாலையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த வேகத்தடை இருப்பதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி தாமதமின்றி வேகத்தடைக்கு வர்ணம் பூசவும், இரு புறங்களிலும் எச்சரிக்கை பலகை வைக்கவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், எமக்கல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:06 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59531

சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நேதாஜி பைபாஸ் ரோடு, நாச்சியப்ப கவுண்டர் தெரு, பென்னாகரம் மெயின் ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை வெள்ளத்தோடு சாக்கடை கழிவுநீர் கால்வாயும் கலந்து ஓடுவதால் பொதுமக்கள் சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி...

மேலும்
ஆதரவு: 23
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:06 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59530

வேகத்தடைகளுக்கு வர்ணம்

சாலை

தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட நல்லம்பள்ளி அடுத்து உள்ள அதியமான் கோட்டை காலபைரவர் கோவில் அருகே இரண்டு பெரிய வேகத்தடைகள் உள்ளன. இவை வர்ணம் பூசப்படாததால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசியும், எச்சரிக்கை ஒளிரும் பட்டைகள் அமைத்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். -கதிர், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:05 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#59529

வாகன ஓட்டிகள் அவதி

கழிவுநீர்

பென்னாகரம்-நாகமரை சாலையில் ஏரியூரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குட்டை போல தேங்குகிறது. பாலம் இருக்கும் பகுதி பள்ளமாக இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையை கடக்கும்போது நான்கு சக்கர வாகனங்களால் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது சேற்று நீரை, வாரி இறைக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? -மந்திரி, மலையனூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:04 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59528

பயன்படாத பயணிகள் ஓய்வு அறை

மின்சாரம்

தர்மபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அறை பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதன் காரணமாக, இந்த ஓய்வு அறையை பயன்படுத்த முடியாமல் வெயிலிலும், மழையிலும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ் நிலைய கடை வாசல்களிலேயே பயணிகள் அமர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூட்டி கிடக்கும் பயணிகள் ஓய்வு அறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -குமார், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:03 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59527

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி நகரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதான பிடமனேரி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வழியிலேயே நிறுத்திவிட்டு அங்குள்ள கடைகளுக்கு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் நிறுத்தப்படும் ஆக்கிரமிப்பு வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இருசக்கர வாகனங்கள் நிறுத்தாதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? -கந்தசாமி, பிடமனேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:03 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#59526

மின்சாரம் தாக்கும் அபாயம்

மின்சாரம்

ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தாண்டியப்பனூர் கிராமத்தில் மின் கம்பத்தில் செடி, மரம், கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மின் கம்பம் செல்லும் பகுதி அருகிலேயே விளையாடுவதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி விட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்திலும், மின்சார ஒயர்களிலும் படர்ந்து காணப்படும் செடி, கொடி, மரங்களை அகற்றப்படுமா? -பொதுமக்கள், தாண்டியப்பனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:02 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#59525

நிழற்கூடத்தில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி காமராஜ் நகரில் இருந்து சின்னத்தள்ளப்பாடி செல்லும் வழியில் நிழற்கூடம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்களும், புழுக்களும் அதிகரித்து இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், மிட்டப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:01 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59524

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை திறந்தவெளியில் உள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. மேலும் சிலர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் உடைந்த கண்ணாடி துண்டுகள் கால்நடைகளின் கால்களில் காயம் அடைவதாகவும், மருத்துவமனை பணியாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 6:00 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#59523

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

பர்கூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பர்கூர்-காரகுப்பம் செல்லும் சுரங்க சாலை மற்றும் கிருஷ்ணகிரி செல்லும் சர்வீஸ் சாலையோரம் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இது வேகமாக காற்று அடித்தால் கூட விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 5:59 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59522

சுகாதார சீர்கேடு

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்திலும், பஸ் நிலைய நுழைவு வாயிலிலும், உள்புறமும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல பஸ் நிலையத்தில் பலரும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து செல்வதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்கவும், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick