Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2025 5:50 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#58628

பாலம் அமைக்க வேண்டும்

போக்குவரத்து

தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து கொடராபாளையம் செல்லும் வழியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் கடந்து நாமக்கல் மாவட்டம் வெப்படை வரை செல்கிறது. இந்த நிலையில் புள்ளாக்கவுண்டம்பட்டி மேல்புதூர் பகுதியில் செல்லும் கிழக்குக்கரை கால்வாய் பகுதியில் பாலம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிறிய தகர பாலம் அமைத்து கால்வாய் கரையை கடந்து கொடராபாளையம் பகுதிக்கு ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்டு கால்வாயின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:47 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58625

கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

மற்றவை

பள்ளிபாளையம்-ஈரோடு நகரத்தை இணைப்பது காவிரி பாலம். இதில் பழைய பாலத்தின் அருகே சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இடதுபுறமாக செல்ல வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் சீமை கருவேல மரங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -லிங்கேஷ், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 14
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:46 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58624

ஆபத்தான குட்டை

தண்ணீர்

பள்ளிபாளையம் அருகே ரங்கனூர் 4 ரோடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்கின்றனர். கோவில் அருகே உள்ள குட்டையில் எப்போதும் தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குட்டையில் சிறுவன் தவறி விழுந்து இறந்தான். எனவே ஆபத்தான நிலையில் உள்ள அந்த குட்டையை சுற்றி தடுப்பு வேலியோ, சுற்றுச்சுவரோ கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கவி, வெப்படை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#58622

விளம்பர பதாகைகள் வைக்கலாமா?

மற்றவை

சேந்தமங்கலம் பிரதான சாலையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் விளம்பர பதாகைகளை கட்டி வைக்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் சேந்தமங்கலத்தை சுற்றிய முக்கிய சாலைகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விளம்பர பதாகைகள் வைப்பதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். -சசிதரன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 9
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:44 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58620

மின்விளக்கு எரிவதில்லை

மற்றவை

ராசிபுரம் எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் உயர் கோபுரத்தில் கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரிவதில்லை. இந்த வழியாகத்தான் ரெயில்வே நிலையம், கோவில்கள், பள்ளிகள், நூற்றுக்கணக்கான குடியிருப்பு வீடுகளுக்கு செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் செல்லும் மாணவ-மாணவிகள், ரெயிலுக்கு செல்லும் பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மின்விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோடீஸ்வரன், ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:43 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58618

பயன்படாத அரசு கட்டிடம்

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த செம்மாண்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொலைத்தொடர்பு துறை அலுவலகம் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி முட்கள் முளைத்து காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜா, செம்மாண்டப்பட்டி.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:42 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58616

மினி பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராசிபுரம் ரெயில் நிலையம் வழியாக சென்னை, பழனிக்கும், பெங்களூரு, நாகர்கோவில், பொள்ளாச்சி முதல் ராசிபுரம் வழியாக சென்னைக்கும் பல்வேறு ரெயில்கள் வந்து செல்கின்றன. ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்கள் மூலம் தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெயில்கள் வரும் நேரத்திற்கு ஏற்றார் போல் மினி பஸ்களை ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு மினி பஸ்களை இயக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:15 PM GMT
Mr.Mohan | வேப்பனஹள்ளி
#58599

அடிக்கடி விபத்துகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள குப்தா நதியின் மேம்பால சாலை வளைவுகளில் முட்புதர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையின் இருப்புறமும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:14 PM GMT
Mr.Mohan | தளி
#58598

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்றம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏத்தகிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 30-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பெரியவர்கள் இந்த சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். அந்த தேங்கிய தண்ணீர் வடிவதற்கு 20 முதல் 25 நாட்கள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைமை நீடிக்கின்றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58597

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஒன்னகரை கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்னகரை கிராம மக்களின் சிரமத்தை போக்க பஸ் வசதி அவசியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தோஷ்குமார், ஒன்னகரை.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:11 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#58596

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிக அளவில் செல்ல கூடிய அந்த சாலையில் உயர் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீகாந்த், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:08 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58592

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பீனியாற்றின் குறுக்கே தார் சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக மெணசி, பூத நத்தம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. மேலும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தரைப்பாலம் ஓரம் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவில் வருபவர்கள் பலர் ஆற்றில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick