Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2025 1:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58719

சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி நகரில் பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும்போது கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைவதுடன், பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாராமலும், மற்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் முறையாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் தர்மபுரி நகரில் உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:24 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58718

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள், பாம்புகள் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை அகற்றி விட்டு புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், நாகர்கூடல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:22 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58717

பயன்படாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கெலவள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னமாவடிப்பட்டி. இந்த பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை பழுதடைந்தது. இதனால் அந்த குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்த மின் மோட்டார், குடிநீர் தொட்டியை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க உள்ளாட்சி...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:24 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#58680

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சி சின்ன கணக்கம்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், நொச்சிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:23 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58679

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

ஓசூரில் உழவர் சந்தை சாலை மற்றும் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சாலையின் நடுவே நாள்தோறும் மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அவை நீண்ட நேரம் சாலையின் நடுவிலேயே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுவதுடன், மிகவும் அவதியடைந்து வருகின்றனர். உழவர் சந்தையிலுள்ள கடைகளில் மாடுகள் திடீரென புகுந்து காய்கறிகளை உண்பதால் வியாபாரிகள் மட்டுமின்றி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர். எனவே சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58678

லாரிகளால் விபத்துகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் சாலையோரத்தில் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து லாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றன. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:21 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58676

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி நகராட்சியில் காந்தி சாலையில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் குடியிருப்பு, கடைகளுக்கு செல்லும் பாதை முழுவதும் தோண்டப்பட்டு உள்ளன. இந்த பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வணிகர்களும் தங்களின் வியாபாரத்தை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், காந்தி சாலை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:54 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#58633

பஸ்கள் வருவதில்லை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், வெள்ளாளகுண்டம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள் அனைத்தும் அம்மாபேட்டை ரவுண்டானா மிலிட்டரி ரோடு வழியாக பழைய பஸ் நிலையம் செல்கின்றன. இதனால் காந்தி மைதானம், மாரியம்மன் கோவில், சித்தேஸ்வரா பகுதிகளில் வசிக்கும் மக்கள் பஸ் வசதி இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே அனைத்து டவுன் பஸ்களும் காந்தி மைதானம் வழியாக செல்ல போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:53 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#58632

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

வாழப்பாடி தாலுகா அனுப்பூர் கிராமத்தில் சாக்கடை கால்வாய் உள்ளது. இங்குள்ள விநாயகர் கோவில் தெருவில் கடந்த 4 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. மேலும் ஆங்காங்கே கழிவுநீர் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கவுதமி, அனுப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:52 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58631

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாநகராட்சி 8-வது வார்டு காமராஜர் நகர் 2-வது தெரு, 2-வது கிராசில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தினமும் அவை அங்குள்ள வீட்டின் முன்பு அசுத்தம் செய்து விடுகின்றன. காலையில் எழுந்ததும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் தெருநாய்கள் தொல்லை இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அதேபோல அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் அவர்கள் தப்பி ஓடும்போது தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 24
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:52 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58630

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் தெரு, சிங்காரப்பேட்டை தெற்கு தெரு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால், அவர்கள் கீழே விழுவது மற்றும் காயம் அடைவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சாலைகளில் குறுக்கே நாய்கள் ஓடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஊர்பொதுமக்கள், குகை, சேலம்.

மேலும்
ஆதரவு: 17
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:51 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58629

வேகத்தடைகளுக்கு வர்ணம் அவசியம்

சாலை

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே மற்றும் சுப்ராயன் ரோட்டில் சுமார் 5 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அனைத்து வேகத்தடைகளுக்கும் வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick