Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2025 5:53 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57713

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளிலும் பொது பிரச்சினையாக தெருநாய் தொல்லை இருந்து வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், சிலர் விபத்தில் சிக்குகிறார்கள்.இதேபோல் காலையிலும் தெருக்கள் வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சேந்தமங்கலம் சாலையில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் அதிக அளவில் இருப்பதால் இங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் ரெயில் நிலையத்திற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:52 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57712

சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்து உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பிரதான சாலையில் அலங்கார வளைவு இருக்கிறது. இந்த வளைவில் இருந்து பொன்விழா நகருக்கு ஏராளமானோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இந்த பள்ளிக்கும் இந்த சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.இந்த பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:51 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57710

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி

தண்ணீர்

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக அந்த தண்ணீர் தொட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் நிரப்பி வைப்பதில்லை. இதனால் பயணிகள், பாதசாரிகள் தண்ணீர் இன்றி சிரமம் அடைகின்றனர். எனவே காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. -ராஜேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:50 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57706

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோ.எளையாம்பாளையம் மந்தகாடு முதல் மாரப்பம்பாளையம் பிரிவு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமைடந்த சாலையை சரி செய்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும், -மதியழகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:49 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57705

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இடையூறில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபால், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:47 PM GMT
Mr.Mohan | அரூர்
#57704

தெருநாய்கள் தொல்லையால் விபத்துகள்

மற்றவை

ஏரியூர் அருகே உள்ள சின்னம்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பென்னாகரம் மேச்சேரி பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தெருநாய்கள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. தெருநாய்கள் தொல்லையால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -அழகி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:45 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57700

அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இங்கிருந்து 2-ம் எண் டவுன் பஸ் கம்பைநல்லூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், தாளநத்தம், பில்பருத்தி, பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை சென்று வந்தது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொம்மிடிக்கு சென்று வந்தனர். இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை, மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:42 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#57688

அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

போக்குவரத்து

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நுழைவுவாயிலில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தாலுகா அலுவலக நுழைவுவாயில் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? -குமார், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:40 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57687

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சர்வீஸ் ரோடு பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரியில் துப்புரவு பணி சீராக செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் சுகாதார சீர்கேட்டால் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாதன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:38 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57686

தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்

மற்றவை

பர்கூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பர்கூரில் இவர்கள் முக்கிய தெருக்களில் சுற்றித்திரிகிறார்கள். இவர்களுக்கு அவ்வப்போது பொதுமக்கள் உணவு வழங்குகிறார்கள். மேலும் அவர்கள் சாலையோரங்களில் படுத்து தூங்குகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். எனவே இவர்களை மாவட்ட மனநல மருத்துவமனையில் சேர்த்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:36 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57685

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி நகரில் சாலை விரிவாக்க பணிகளும், வடிகால் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் 5 ரோடு முதல் காந்தி சிலைக்கு செல்லும் காந்தி ரோட்டில் ஒரு பகுதி முழுவதும் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய வாகனங்களும் அந்த சாலையில் செல்ல முடிவதில்லை. குடியிருப்புவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:35 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57684

இரவு நேர பஸ் சேவை கிடைக்குமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தினமும் பணி நிமித்தமாக பலரும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு வருகிறார்கள். அவர்கள் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக பர்கூர், குருபரப்பள்ளி உள்பட பகுதிகளில் இரவு நேரங்களில் பஸ்களை நிறுத்துவதில்லை. எனவே இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சாதாரண பஸ்களை இயக்கிட வேண்டும். அதே போல பயணிகள் இறங்க கூடிய பஸ் நிறுத்தங்களில் இறக்கி செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick