Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 4:39 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#57850

இடிந்து விழும் நிலையில் நிழற்கூடம்

மற்றவை

பாலக்கோடு ஒன்றியம் எர்ரனஅள்ளி கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பணிகளின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமாகி இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணிகண்டன், எர்ரனஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:36 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#57848

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

ஏரியூர் அருகே மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏர்கோல் பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் போதிய சாக்கடை கால்வாய் வசதிகள் செய்யப்படாததால், தெருக்களிலேயே சாக்கடை ஆறு போல ஓடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவுமும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், ஏர்கோல்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57847

மின் விளக்குகள் எரிவதில்லை

மற்றவை

தர்மபுரி-சேலம் சாலையில் மைய தடுப்பு பகுதியில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் செந்தில் நகர் பகுதி முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் அவ்வப்போது எரிவதில்லை. இதனால் இந்த பகுதி இருளில் மூழ்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இரவு நேரங்களில் மின்விளக்குகள் தொடர்ந்து எரிவதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:33 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#57846

பயன்படாத ஆழ்துளை கிணறு

தண்ணீர்

ஊத்தங்கரை ஒன்றியம் வெங்கடதாம்பட்டி ஊராட்சி காந்திநகர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆழ்துளை கிணறு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், காந்திநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:31 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#57845

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும் கோர்ட்டு, தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் சிலைக்கு எதிரே உள்ளன. இந்த நிலையில் அண்ணா சிலைக்கு பின்புறம் உள்ள சாக்கடையில் நீண்ட நாட்களாக கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நடமாடுவதற்கே பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கால்வாயை உடனடியாக தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆர்.சண்முகம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:29 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57843

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் பாரத மாதா கோவில் உள்ளது. இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதில் வரும் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் தெருக்களில் ஆறாக செல்கிறது. மேலும் அந்த கழிவுநீரில் பிளாஸ்டிக் கழிவுகளும் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57841

புதிய குப்பை தொட்டி வைக்கலாமே!

குப்பை

மத்தூரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள ராச வீதி பகுதியில் பல வாரங்களாக குப்பைகள் வாருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை தொட்டியும் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தி குப்பை தொட்டியும் புதிதாக வைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. -சலீம், மத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 6:02 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57718

விபத்து அபாயம்

சாலை

சேலம் அண்ணா பூங்காவில் இருந்து குழந்தை இயேசு பேராலயம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக மேம்பாலம் இறங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு நெரிசல் ஏற்படுவது தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோவன், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 6:01 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#57717

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களையும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. எனவே இந்த பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், ஜலகண்டாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:59 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57716

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழைகாலங்களில் வாகனங்கள் அந்த வழியாக செல்வதால் சாலை மிகவும் சேதமடைகிறது. மேலும் மழை தண்ணீர் பள்ளத்தில் தேங்குவதாலும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மின்விளக்குகள், தரமான சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:58 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#57715

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

கொங்கணாபுரத்தில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசவில்லை. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசி, ஒளிரும் பட்டைகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிபைரவன், கொங்கணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:57 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57714

சுகாதார கேடு

குப்பை

தாரமங்கலம் ஒன்றியம் குருக்குப்பட்டி கிராமத்தில் உள்ளது பவளத்தானூர் ஏரி. இந்த ஏரியையொட்டி உள்ள பிரதான சாலையில் மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தெருநாய்கள் உணவை தேடி குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த ஏரியையொட்டி கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். -அரசன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick