Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 6:20 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58061

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். -சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:18 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58060

சுகாதார சீர்கேடு

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட சமுத்திரம் ஊராட்சி முருகன் கோவில் அடிவாரத்தில் அண்ணா நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்காக கோழி, பன்றிகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். பின்னர் அவற்றின் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பன்றி, கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:17 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58059

குண்டும், குழியுமான சாலை

சாலை

கடத்தூர் ஒன்றியம் ஓபிளி நாயக்கன்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கெடகாரஅள்ளி. இந்த கிராமத்திற்கு புதுரெட்டியூர் வழியாக செல்லும் தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் இந்த வழியே செல்லும் போது தட்டுத்தடுமாறி செல்கின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முத்துசாமி, கடத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:16 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58058

சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி சந்தைப்பேட்டையில் நீண்ட நாட்களாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை சீரமைக்க இப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கழிவுநீர் கால்வாயையொட்டி குடிநீர் குழாய் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைத்து அதன் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:15 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58057

ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும்

தண்ணீர்

நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட இண்டூர் செங்குந்தர் மயானம் பின்புறம் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றிலிருந்து குடங்களை தலையில் சுமந்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இப்பகுதிக்கு செங்குந்தர் மயானம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:10 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57892

விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம் பெரியார் மேம்பாலத்தில் இரு புறங்களிலும் அழகுக்காக மரக்கன்றுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகள் சாலையை ஆக்கிரமித்தபடி வளர்ந்து செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 5:06 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57885

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

சேலம் தொங்கும் பூங்கா அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வெளிபுறத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு குடிநீர் குழாய் உள்ளது. சுற்று வட்டார பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது அந்த பகுதியில் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிபடுகிறார்கள். மேலும் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருதி விரைந்து பணிகளை மேற்கொண்டு குடிநீர் வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:47 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57856

பெயர் பலகையை சரிசெய்யலாமே!

போக்குவரத்து

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட லத்துவாடியில் என்.புதுப்பட்டியில் இருந்து வரும் சாலையில் பெயர் பலகை உள்ளது. அந்த பெயர் பலகையில் நீண்ட நாட்களாக லத்துவாடி என்ற எழுத்தில் ‘லத்து’ மட்டும் உள்ளது. ‘வாடி’ அழிந்து போய் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவே பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -ராமசாமி, லத்துவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:46 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#57855

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

வெப்படை அடுத்த சின்னார்பாளையம் பாலாஜி நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நகரின் 3 வீதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே கழிவுநீர் வாய்க்கால் வசதி உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார், வெப்படை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:45 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57854

பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

போக்குவரத்து

கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பஸ்சுக்காக காத்துக் கிடக்கும் மலைவாழ் மக்கள் வெயிலில் உட்கார்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில சமயங்களில் மழை பெய்தால் அங்குள்ள கடைகளுக்குள் ஒதுங்க வேண்டிய நிலைமையில் இருந்து வருகின்றனர். எனவே வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பாக நிற்பதற்கு பஸ் நிலையத்திற்குள் மேற்கூரை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -பிரசாந்த்குமார், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:42 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57853

பள்ளமான சாலை

சாலை

திருச்செங்கோடு தாலுகா கோக்கலை கிராமம் கோ.எளையாம்பாளையம் அம்மையப்பன் நகரிலிருந்து குருக்கபுரம் சாலையை இணைத்து ஹை ஸ்கூல் மேடு வரையில் உள்ள தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தனியார் பள்ளி பஸ்கள், டிப்பர் லாரிகள் அதிகமாக செல்லும் வழித்தடமாக இந்த சாலை அமைந்துள்ளது. அவசர காலங்களில் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு இந்த பிரதான சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2025 4:43 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57851

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் நாமக்கல் செல்லும் சர்வீஸ் ரோட்டில் குப்பைகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. அருகில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டகளூர் கேட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மளிகைக்கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றின் குப்பைகளையும் சர்வீஸ் ரோட்டில் கொட்டுகின்றனர். இந்த குப்பைகளை நாய்கள் கிளறிவிட்டு சாலையில் ஓடும்போது இரு சக்கர வாகனங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும். -கண்ணன்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick