Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025
Mr.Mohan | மேட்டூர்
#56249

உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செலவடை செல்லும் வழியில் தோரமங்கலம் ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் அந்த பகுதியில் எந்தவித வெளிச்சமும் இல்லாத காரணத்தால் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. மேலும் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும் வெளிச்சம் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் உயரமின் கோபுர மின்விளக்கு மற்றும் வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | சேலம்-வடக்கு
#56245

காட்சி பொருளான தெருவிளக்குகள்

மற்றவை

கருப்பூர் வெள்ளாளப்பட்டி சந்தைபேட்டை குடித்தெரு, ராஜவீதி ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த தெருவிளக்குகள் தற்போது சரிவர எரிவதில்லை காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் இங்கு நடமாட தயங்குகின்றனர். எனவே தெருவிளக்குகள் சரிவர எரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. -சவுந்தர், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | ஓமலூர்
#56244

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

போக்குவரத்து

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட மோட்டுப்பட்டி பிரதான சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. மேலும் இதே பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூசவும், புதிய மின்விளக்குகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | குமாரபாளையம்
#56240

இருசக்கர வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

குமாரபாளையத்தில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே தற்காலிகமாக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு அமைந்துள்ள வணிக வாளகம் முன்பு அதிக இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. இதன் காரணமாக பயணிகளும், அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அருண், குமாரபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | இராசிபுரம்
#56238

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

ராசிபுரம் டவுன் நாமக்கல் ரோடு வழியாக நாமக்கல், திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் வழியாகத்தான் தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்கின்றன. நாமக்கல் ரோடு மிகவும் போக்குவரத்து உள்ள பகுதியாக விளங்குவதால் நாமக்கல் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் ரோட்டை கடக்க அச்சப்படுகின்றனர். எனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல நாமக்கல் ரோட்டில் இரண்டு இடங்களில் வேகத்தடைகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#56236

குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

மோகனூர் அடுத்த பாலப்பட்டியில் இருந்து எஸ்.வாழவந்தி வழியாக வள்ளிபுரம் செல்லும் சாலையில் கதிர்மலை முருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் வழியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் தார்சாலையில் தண்ணீர் ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் செல்லும்போது கார், பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் வேகமாக சென்றால் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள தார்சாலை சேதமடையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | இராசிபுரம்
#56234

சுகாதார சீர்கேடு

குப்பை

நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகளில் இறந்துபோன கோழிகளை திறந்த வெளியில் சிலர் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் கோழிப்பண்ணை கழிவுகள், இறந்த கோழிகளை இந்த பகுதியில் வீசி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | சேந்தமங்கலம்
#56233

சீரமைக்கப்படாத வாய்க்கால் கரை

தண்ணீர்

கொல்லிமலை அடிவாரத்தில் நிமித்ராயன் மேடு பகுதியில் இருந்து வெண்டாங்கி கிராமத்திற்கு செல்லும் குறுக்குப்பாதையில் பாண்டியாறு வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்கால் பகுதியில் கடந்த வருடம் பெய்த பலத்த மழையால் வாய்க்கால்களின் பல இடங்களில் கரைகள் உடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்காமல் இருந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் செல்லும் விவசாயிகள் நலன் கருதி உடைந்த கரைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -விஜயகுமார், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | தருமபுரி
#56232

சுகாதார வளாகங்கள் பயன்பாட்டுக்கு வருமா?

மற்றவை

தர்மபுரி தாலுகா அலுவலகம் அருகே பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் புதர் மண்டி இருந்தன. அண்மையில் இவை சீரமைக்கப்பட்டன. ஆனால் இவை இதுவரை முறையான பயன்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து மூடி வைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | பாலக்கோடு
#56231

குப்பை கழிவுகளை அகற்றலாமே!

குப்பை

பாலக்கோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யவும், காய்கறி பழங்களை பதப்படுத்தவும் அரசு சார்பில் 10க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளது. வேளாண் விற்பனை கூட பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள், அழுகிய பழங்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#56226

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரில் தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருகின்றனர். தற்போது இந்த அலுவலகம் முழுவதும் குப்பைகளும், முட்புதர்களும் நிறைந்து காணப்படுகின்றது. இதனை தூய்மை பணியாளர்கள் அகற்றவது இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றத்தால் அலுவலகத்தினுள் பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#56215

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் ஏராளமான டிப்பர் லாரிகள் செல்கின்றன. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் 2 சக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. குறிப்பாக அங்கு புதிதாக சாலை போடப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களும், 2 சக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் அவ்வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick