குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-10 14:24 GMT



சோளிங்கரை அடுத்த கொண்டபாளையத்தில் இருந்து பாணாவரம் மெயின் ரோட்டுக்கு செல்லும் வழியில் மயானம் உள்ளது. அந்த மயானம் அருகே ஆழ்துளை கிணறு, அடிபம்பு மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டது. மயானத்தின் இறுதிச் சடங்குகளுக்கும், கால்நடைகளின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்த அடிபம்பு பழுதாகி 2 ஆண்டுகள் ஆகிறது. சிறு மின்விசை தொட்டியை சமூக விரோதிகள் உடைத்து தடம் தெரியாமல் செய்து விட்டனர். நகராட்சி நிர்வாகம் சீரமைத்துக் கொடுக்குமா?

-லட்சுமிநரசிம்மன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்