கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்

Update: 2026-07-26 19:28 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பீம்ராவ் நகர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கால்வாயில் அமைக்கப்பட்ட குழாயில் சேதம் ஏற்பட்டால் அதன் வழியாக கழிவுநீர் கலந்து வரக்கூடிய சூழல் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயில் செல்லும் குடிநீர் குழாயை முறையாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

-விஜய், சமூக ஆர்வலர், பொய்கை.

மேலும் செய்திகள்