நெல்லை அருகே மேலகுளம் சரவணாநகர் விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் உடைந்துவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஆபித் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.