கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அருகில் சின்ன ஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியின் பெரும்பாலான பகுதிகளை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் ஏரியின் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இது அப்பகுதியில் செல்வோரை முகம் சுழிக்க வைப்பதாக இருந்து வருகிறது. எனவே ஆகாயத்தாமரைகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி அழகுப்படுத்தவும், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.