பொதுமக்கள் அவதி

Update: 2026-07-26 14:10 GMT

புதுக்கோட்டை மாநகர் மச்சுவாடி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை திறக்கப்படும் காவிரி குடிநீர், எப்போது, எந்த நேரத்தில் வருகிறது என்று தெரியாத சூழல் நிலவுகிறது. மேலும், பகல் நேரத்தில் குடிநீர் திறக்கப்படுவதால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் எளிதில் குடிநீர் பிடிக்கும் வகையில் காலை அல்லது மாலை வேளையில் காவிரி குடிநீரை திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்