நோயாளிகள் பரிதவிப்பு

Update: 2026-07-26 19:41 GMT

பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 800-க்கும் அதிகமான புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் உள் நோயாளிகளாக 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால், நோயாளிகள், பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் வாங்கி வந்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட எந்திரம் உள்ளது. ஆனால் குடிநீர் தான் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-ராஜ், பல்லடம்.

மேலும் செய்திகள்