திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அய்யம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும் ஊராட்சிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-மணிகண்டன், அருள்புரம்.