தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை திப்பிராஜபுரத்தில்உள்ள திருமலை ராஜன் ஆற்றில் நாணல்களும், புதர்களும் மண்டி கிடக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டால் இந்த ஆற்றில் சீராக தண்ணீர் செல்லாது. குறிப்பாக இதை நம்பியுள்ள கடைமடைக்கு முறையாக பாசனத்துக்கு தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக திருமலைராஜன் ஆற்றை ஆக்கிரமித்துள்ள புதர்கள், நாணல்செடி, கொடிகளை தூர்வார வேண்டும்.
பொதுமக்கள், திப்பிராஜபுரம்.