ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2022-10-23 11:10 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி சந்தைமேட்டில் பழைய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பாழடைந்த நிலையில் உள்ளது. எந்த வித பயன்பாடும் இல்லாத அந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபத்தான நிலையில் உருக்குலைந்து காணப்படுகிறது. அந்தத் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிைய இடித்து விட்டு, நூலகமோ அல்லது வணிக வளாகமோ கட்டினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நடவடிக்கை எடுப்பார்களா?

-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்