Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59513

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறுபோக்குவரத்து

வேலூர் மாநகரில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அண்ணாசாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, காட்பாடி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மாடுகள் சுற்றி திருகின்றன. மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோபி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59512

சேறும் சகதியுமான சாலை

சேறும் சகதியுமான சாலைசாலை

வேலூர் கொசப்பேட்டை செல்வகணேசர் கோவில் முன்புள்ள தெருவில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் கால்வாயில் உள்ள சேறு, சகதிகள் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர் (வேலூர் தெற்கு)
#59511

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் ஆர்.கே.மாதா கோவில் தெரு, தேவராஜ் நகர், பி.டி.சி. ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்குள்ள ஆர்.கே.மாதா கோவில் தெரு மெயின் சாலையில் வீரபத்திரன் கோவில் அருகே சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், அவற்றை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மகேந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:38 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#59510

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புகழிவுநீர்

வேலூர் அருகே தண்டலம்கிருஷ்ணாபுரத்தில் இருந்து வஞ்சூர் செல்லும் சாலை ஓரங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகச் செல்கிறது. உடைப்பு சரி செய்யப்பட்ட சில இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வெங்கடேசன், டி.கே.புரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59509

கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் போடுவார்களா?

கால்வாய்க்கு சிமெண்டு சிலாப் போடுவார்களா?கழிவுநீர்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேலே சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. பஸ் நிலையத்துக்குள் தினமும் ஏராளமான பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக நடந்து செல்கின்றனர். விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் அமைப்பார்களா? -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59507

கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம்

கழிவுநீர் கால்வாய் பாலம் சேதம்கழிவுநீர்

குடியாத்தம் ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தைப் புதிதாக அமைத்துத்தர பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் பாலத்தைப் புதிதாகக் கட்டித்தருவார்களா? -ஜி.தமிழ், மூங்கப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59504

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

ஆபத்தான நிலையில் மின்கம்பம்மின்சாரம்

வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3-ல் ஸ்ரீராம் நகர் விரிவு பகுதி, காமராஜர் தெரு முனைகள் சந்திப்பில் உள்ள மின்கம்பத்தில் இருந்து அனைத்துத் தெருக்களில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் உறுதியான பிடிமான கம்பி இல்லாமல், ஒரு பக்கமாக வளைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வாகனங்கள் திரும்பும் போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மக்கள் நலன் கருதி மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -துரைசாமி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#59502

மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்

மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்மின்சாரம்

ஆற்காடு நகராட்சி வீட்டுவசதி வாரியம் பகுதி-1 மற்றும் நகராட்சி மனைப்பிரிவில் உள்ள 20 தெருக்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் உரசுகின்றன. தற்போது பெய்து வரும் மழையால் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பிகள் மீது உரசும் மரக் கிளைகளை வெட்டி அகற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.டி. குணா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:27 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59499

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

சாலை

வாலாஜா பஸ் நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் பின்பக்கம் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருபுறமும் பெரிய அளவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. கூடுதலாக கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் தெருவை நேரில் பார்வையிட்டு வரைபடத்தில் உள்ளபடி ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா? -அய்யாசாமி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59497

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜாவில் அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களிலும், 2 தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்துகளும் நடக்கின்றன. மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். -சாம்பசிவம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:23 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59496

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?

மற்றவை

திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையோரம் மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமென்றாலும் சாய்ந்து, கீழே விழ வாய்ப்பு உள்ளது. இந்த மரத்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 4:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#59495

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?தண்ணீர்

திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள அரசு நிதியுதவி பள்ளி அருகே குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை சீர் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கலையரசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick