Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 May 2025 8:35 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#56103

ஆபத்தான தடுப்புச்சுவர்

ஆபத்தான தடுப்புச்சுவர்சாலை

வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே சாலையோர வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மோதி படுகாயம் அடைகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஆபத்தான தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ரமேஷ்.சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 22
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:31 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56102

கோழி கழிவுகளை அகற்ற வேண்டும்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து கந்திலி செல்லும் சாலையில் கசிநாயக்கன்பட்டி பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழி கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சசிகாந்த், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56101

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் வாரச்சந்தை இருக்கும் பகுதியில் உள்ள சாலை மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. அந்தச் சாலையில் செல்ல மக்கள், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவபிரகாஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56100

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை வரும் சாலையின் ஓரம் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்தக் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -லட்சுமணன், புத்துக்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#56099

ஆழ்துளை கிணறு மூடப்படுமா?

ஆழ்துளை கிணறு மூடப்படுமா?மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிருஷ்ணா நகரில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ஆழ்துளை கிணறை மூட வேண்டும். -சந்தானம், குரிசிலாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56098

அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

காவேரிப்பாக்கம் ஒன்றியம் நெமிலி தாலுகா புதுப்பட்டு கிராமத்தில் இருந்து காஞ்சீபுரம், பனப்பாக்கம் செல்ல கன்னிகாபுரம், ஆலப்பாக்கம் வழியாக புதிதாக அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும். இதனால் வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேலன், புதுப்பட்டு கிராமம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56097

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜாபேட்டையில் அணைக்கட்டு ரோடு உள்ளது. நான்கு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகலாக உள்ளது. சாலையின் இரு பக்கமும் உள்ள நடைபாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -தேவேந்திரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:19 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#56096

குரங்குகள் அட்டகாசம்

குரங்குகள் அட்டகாசம்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் மேலகுப்பம் அருகே டி.சி. குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. மின்வயர் அறுந்தால் அசம்பாவிதம் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். -வடிவேல், மேலகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#56094

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

அரக்கோணம்-சோளிங்கர் ரோடு பாரத ஸ்டேட் வங்கி பகுதியைச் சற்றிலும் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் அடைப்பு ஏற்பட்டு செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கழிவுநீர் ஓடாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாயை தூர்வார நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:13 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#56093

குடிநீர் வசதி செய்யப்படுமா?

தண்ணீர்

காவேரிப்பாக்கம் வாசுகி நகரில் 200 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. குடிநீர் இணைப்பும் வழங்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் அதிகாரிகள் இன்னும் நடடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுத்து வாசுகி நகருக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். -ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:11 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#56092

பயணிகள் நிழற்குடை வசதி தேவை

பயணிகள் நிழற்குடை வசதி தேவைமற்றவை

செங்கம் ஒன்றியம் பக்கிரிப்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வியாபாரம், வெளியூருக்கு செல்வோர் வெயில், மழையில் நிற்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -நெ.சங்கர். பக்கிரிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 8:07 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#56091

ஆழ்துளை கிணறு, மின்சாரப்பெட்டி பழுது

ஆழ்துளை கிணறு, மின்சாரப்பெட்டி பழுதுமற்றவை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு மீனவர் தெருவில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி மூலம் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஆழ்துளை கிணறு தண்ணீர் தொட்டியும், மின்சாரப்பெட்டியும் பழுதடைந்துள்ளன. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் சரி செய்து கொடுக்காமல் உள்ளனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -அருண்குமார், சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick