Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57372

திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்

திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்போக்குவரத்து

திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வாகனங்களில் ஜல்லிகள், எம்.சாண்ட் மணல், செங்கல் ஆகியவை மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. காற்று வீசும்போது, அந்த வழியாக செல்வோரின் கண்களில் மணல், துகள் விழுகிறது. எனவே வாகனங்களில், மணல், ஜல்லிக்கற்களை தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். -சரவணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57371

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் சாலையோரம் குப்பைகள், கோழிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57370

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க மின் வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57369

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#57368

சாலை பழுது

சாலை

திருப்பத்தூர் லண்டன் மிஷின் ரோடு பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும். -லோகேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:39 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#57367

சேதமான பள்ளி சுற்றுச்சுவர்

சேதமான பள்ளி சுற்றுச்சுவர்மற்றவை

சோளிங்கரை அடுத்த எம்.பி. குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. உடைந்த பகுதி வழியாக விஷ பூச்சிகள் உள்ளே வருகின்றன. மாணவ-மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57366

மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

வாலாஜாவில் இருந்து அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடந்தது. சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் வாலாஜா நகரில் இருந்து வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே அம்மூர் கூட்ரோடு வரை மின் விளக்குகள் இல்லை. வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முதல் அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாணிக்கம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:35 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#57365

வழிகாட்டி மைல்கல்லை மறைத்த செடி, கொடிகள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நான்கு முனை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சோளிங்கர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு 4 கிலோ மீட்டர் தூரத்தில் ரெயில் நிலையம் உள்ளது என எழுதப்பட்ட அறிவிப்பு மைல்கல் புதர்களால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையம் ெசல்பவர்கள் வழிதெரியாமல் திணறும் நிலை உள்ளது. எனவே மைல் கல்லின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். -முனிரத்தினம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#57363

கால்வாய் ஆக்கிரமிப்பு

கழிவுநீர்

ஆற்காடு நகராட்சி 27-வது வார்டு கார்னர் அரசமரத்தெரு பகுதியில் கால்வாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியதால் கழிவுநீர் ஓடாமல் தேங்கும் நிலை உள்ளது. கால்வாயில் குப்பைகளும் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -சிவக்குமார், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:29 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#57362

மரக்கிளையை அகற்றுவார்களா?

மரக்கிளையை அகற்றுவார்களா?குப்பை

அரக்கோணம் அவுசிங் போர்டு பிரதான சாலையில் மரங்களின் கிளைகள் மின் கம்பிகளில் உரசியபடி இருந்ததை வெட்டி, அதே இடத்திலேயே போட்டு விட்டனர். அவை பல வாரங்களாக அப்புறப்படுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அவுசிங் போர்டில் இருந்து கணேஷ் நகர் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்றவும், சாலையைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ்ச்செல்வன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#57361

அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், அரக்கோணம், கல்பாக்கம், திருத்தணி ஆகிய ஊர்களுக்குச் செல்ல புதிய பஸ் நிலையத்துக்கு வந்து தான் பஸ் ஏற வேண்டும். ஆனால், இப்பகுதிகளில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குச் செல்ல நேரம் மற்றும் பண விரயம் ஆகிறது. அதனாலேயே பலர் புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லாமல் வள்ளலார், சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் பஸ்சுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த வழியாகப் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 7:21 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#57360

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

குடியாத்தம் நகராட்சி 14-வது வார்டு அருணாசலநகரில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாகோல் மற்றும் இதர கழிவுகள் எரிக்கப்படுவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் சுவாச பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.சந்தோஷ், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick