மின்மோட்டார் பழுதால் குடிநீர் பிரச்சினை

Update: 2023-01-04 12:36 GMT

வாலாஜா நகராட்சி 1-வது வார்டில் கரிக்கல் மலை பின்பக்கம் மாடு அறுக்கும் தொட்டி எதிரில் ஆழ்துளை கிணறு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்த ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. அதன் பிறகு மோட்டாரை கழட்டி எடுத்துச் சென்ற நகராட்சி நிர்வாகம், மீண்டும் சரி செய்து பொருத்த வில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

-அழகர், வாலாஜா.

.

மேலும் செய்திகள்