நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவில் பகுதி, பத்மாவதிநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் பல வருடங்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடைகளில் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.