திருவள்ளூர் மாவட்டம், பெரிய களக்காட்டூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அந்தபகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக ஏரியை சுத்தம் செய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.