கால்வாயில் இருக்கும் குடிநீர் குழாய்

Update: 2024-01-07 17:02 GMT

பேரணாம்பட்டில் பழைய ஆம்பூர் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் ஓடாமல் தேங்கி உள்ளது. குடிநீர் தொட்டியின் குழாய் கால்வாயிலேயே உள்ளதால் கழிவுநீர் குடிநீரில் கலந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும். குடிநீர் குழாயை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்