தேங்கிய நீரை அகற்ற வேண்டும்

Update: 2023-05-14 17:37 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரைநகர் உள்ளது. இப்பகுதியில் குடியிருப்புக்கு நடுவே காலி இடங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் மழைநீர் அப்பகுதியில் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தேங்கிய மழைநீரால் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். எனவே தேங்கிய மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெண் பிரணவ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்