குடிநீர் தொட்டி அகற்றம்

Update: 2024-04-07 17:04 GMT

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி நடக்கிறது. அதற்காக அங்கிருந்த ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டனர். இதனால், சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகி்ன்றனர். குடிநீர் தொட்டிைய ஒரு இடத்தில் தற்காலிகமாக ைவத்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாண்டியராஜ், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்