குளம்போல் தேங்கிய மழைநீர்

Update: 2022-07-20 18:32 GMT



அரக்கோணம் சுவால்பேட்டையில் இருந்து அசோக் நகர், காந்தி நகர், கிரிசிங் நகர், பெரியார் நகர், இஸ்மாயில் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான தெருவான பாலசுந்தரம் தெரு குண்டும் குழியுமாக உள்ளது. கடந்தசில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பெருமாள், காந்தி நகர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்