தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

Update: 2023-12-10 17:56 GMT

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சேதமடைந்து கழிவுநீர், மழைநீருடன் கலந்து தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தேங்கிய நீரை அகற்ற வேண்டும்.

-தர்மன், அரக்கோணம். 

மேலும் செய்திகள்