குடிநீர் சரியாக வருவதில்லை

Update: 2026-03-01 13:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி கூட்ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் வைத்தும், மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இப்பகுதியில் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறு வற்றிவிட்டது. மேலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரும் சரியாக வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி இப்பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்