தூத்துக்குடி மறவன்மடம் பஞ்சாயத்து அந்தோணியார்புரம் பகுதியில் போதிய குடிநீர் வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு உவர்ப்பு தன்மை மிகுந்த தண்ணீரே பெரும்பாலும் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. எனவே போதிய குடிநீர் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.