ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கந்தமாதான பர்வதம் சம்பை ரோடு, ரேஷன் கடை தெரு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினருக்கு போதிய குடிநீர் வசதி இன்றி அவதியடைந்து வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி பொதுமக்கள் நலன்கருதி போதிய குடிநீர் வசதி செய்துதர வேண்டும்.