குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சி பாரதி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஆற்றங்கரையில் உள்ள தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தொட்டி விரிசல் அடைந்து உள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் கசிந்து வருகிறது. இதன் காரணமாக போதிய அளவில் குடிநீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் இப்படியே விட்டால் விரைவில் தொட்டி இடிந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த தொட்டியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.