விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அயன்நாச்சியார் கோவில் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலர் பணம் கொடுத்து வெளியே குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிைடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.