சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள பவளத்தானூர் ஏரி முக்கிய நீர் ஆதாரமான ஏரியாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் செப்டிக் டேங்க் கழிவுகள், இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை ஏரியில் கொட்டப்படுகின்றது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை தூர்வாரி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.