தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லை. பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிக்கு, குடிநீர் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர்.