சரவணம்பட்டி விசுவாசபுரம் அன்னை நகர் 4-வது வீதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் காலி குடங்களுடன் குடிநீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு அலைந்து திரிகின்றனர். எனவே அங்கு ஏற்பட்டு உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.