வேலூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை வைக்கப்பட்டு வெகு நாட்களாக கிடப்பில் உள்ளது. அதை சுற்றி உடைந்த தள்ளுவண்டிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி விட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவநேசன், வேலூர்.