குரங்குகளுக்கு குடிநீர் தொட்டி

Update: 2026-07-05 13:37 GMT

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் சித்தர் கோவில் அருகே வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் வௌியேறி தண்ணீர் மற்றும் உணவு இன்றி சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. சில சமயங்களில் வாகனங்களில் குரங்குகள் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. எனவே அப்பகுதியில் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்களுக்கு குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்