ஏரி தண்ணீரில் துர்நாற்றம்

Update: 2026-07-05 12:57 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையம் அருகில் சின்னஏரி அமைந்து உள்ளது. இந்த ஏரியில் சமீபத்தில் பெய்த மழைக்கு ஓரளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இருப்பினும் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. இது ஏரியின் அழகை கெடுப்பதுடன், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து இருப்பதால் ஏரி தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் ஆகாயதாமரையை அகற்ற முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்