சீரான குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2026-07-05 12:56 GMT

காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்கல் பஞ்சாயத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஒகேனக்கல் குடிநீரை மட்டுமே ஆதாரமாக கொண்டு இப்பகுதி மக்கள் உள்ளனர். ஆனால் இங்கு அமைக்கப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாததால் இரும்பு குழாய்கள் துருப்பிடித்து தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் வருவதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. எந்திரம் பழுதாகிவிட்டது. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, ஒகேனக்கல் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்