Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Sep 2025 12:06 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#59418

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கோவை சிங்காநல்லூர் 61-வது வார்டு தேவேந்திர வீதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இது தவிர அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 12:05 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#59417

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சரவணம்பட்டி விசுவாசபுரம் அன்னை நகர் 4-வது வீதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் காலி குடங்களுடன் குடிநீருக்காக அருகில் உள்ள பகுதிகளுக்கு அலைந்து திரிகின்றனர். எனவே அங்கு ஏற்பட்டு உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 12:05 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#59416

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

கோைவ மேட்டுப்பாளையம் சாலையில் வீரபாண்டி பிரிவில் இருந்து வீரபாண்டி செல்லும் வழி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் வீரபாண்டி செல்லும் வாகனங்களும், அங்கிருந்து வரும் வாகனங்களும் நீண்ட தூரம் சுற்றி சென்று வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறது. எரிபொருள் செலவு, நேர விரயம் ஏற்படுகிறது. எனவே தடுப்புகளை அகற்றி வழியை திறந்து விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:08 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#59371

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

கணபதி சத்தி ரோடு அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலையில் பல மாதங்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:07 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#59370

கால்நடைகள் தொல்லை

மற்றவை

பந்தலூரில் பஸ் நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் கால்நடைகள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை சாலைகளிலும் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பொதுமக்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தை அசுத்தப்படுத்துகின்றன. எனவே அங்கு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2025 10:06 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#59369

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன்காவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பகவதி அம்மன் கோவில் அருகே சாலை உடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 11:35 AM GMT
Mr.V.Ramachandran | மேட்டுப்பாளையம்
#59218

துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்

மற்றவை

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அங்கு இலவச பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. அந்த கழிப்பிடம் முறையாக பராமரிப்படுவது இல்லை. கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 11:35 AM GMT
Mr.V.Ramachandran | மேட்டுப்பாளையம்
#59217

விபத்து அபாயம்

போக்குவரத்து

பெரியநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஜங்ஷன் பெட்டி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு திரும்பும்போது அந்த ஜங்ஷன் பெட்டி மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த ஜங்ஷன் பெட்டியை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 11:34 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#59216

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

கோவை ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையோரங்களில் போதிய தெருவிளக்குகள் பொருத்தப்படவில்லை. மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இருந்தாலும், இரவில் சர்வீஸ் சாலையில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சப்படுகிறார்கள். இருட்டை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சர்வீஸ் சாலையில் போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2025 11:33 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#59215

குழாய் உடைப்பு

தண்ணீர்

கோவை சவுரிபாளையம் பாரதி நகரில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்து உள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீண்ட நாட்களாக அங்கு தண்ணீர் வீணாக சாலையோரத்தில் வழிந்தோடி வருகிறது. எனவே அங்கு ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 12:55 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#59062

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் இருந்து செரியேறி வழியாக மாங்கோடு பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 12:50 PM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#59061

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவையை அடுத்த வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் அந்த பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அவர்கள் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick