Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 May 2025 12:10 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#56165

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 27-வது வார்டு பீளமேடு கனகுபிள்ளை வீதியில் மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 12:09 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#56164

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 69-வது வார்டுக்கு உட்பட்ட தி.நகர் பகுதியில் தனியார் பள்ளி எதிரே சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி கிடக்கிறது. மழை பெய்தால் இதே நிலைதான் எப்போதும் நீடிக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 12:08 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#56163

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்கு தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:10 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55948

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் அருகே புஞ்சைகொல்லி ஆட்டோ ஸ்டேண்ட் முதல் மசூதி, கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம்(ரேஞ்ச்-3) வழியாக செம்பக்கொல்லிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழை பெய்யும்போது அந்த சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:10 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#55947

உப்பு தண்ணீர் வரவில்லை

தண்ணீர்

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு நேரு நகர் 2-வது வீதியில் கடந்த ஒரு வாரமாக உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அன்றாட தேவைகளுக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் வீண் செலவு ஏற்படுகிறது. எனவே உடனடியாக உப்பு தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:10 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#55946

சுகாதார சீர்கேடு

குப்பை

கோவையை அடுத்த காருண்யா நகர் சிறுவாணி சாலையோரத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். ஆனால் அதை மீறி அங்கு குப்ைபகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் குப்பை தொட்டிகளும் உள்ளது. அதில் கொட்டப்படும் குப்ைபகளையும் உடனுக்குடன் அகற்றாததால், மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:09 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#55945

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் அருகே சின்னசாமி நாயுடு சாலையில் இருந்து சத்தி சாலைக்கு செல்லும் சிக்னல் பகுதியில் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:09 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#55944

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பொள்ளாச்சியில் முக்கிய சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அதுவும் இரவு நேரத்தில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 11:08 AM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#55943

சாலையில் திடீர் பள்ளம்

சாலை

கோவையை அடுத்த நீலாம்பூர் பஸ் நிறுத்தம் அருகே அவினாசி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்த பள்ளத்தில் இறங்கி ஏறும்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். அதுவும், இரவில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறும் முன்பாக, அந்த சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 11:07 AM GMT
Mr.V.Ramachandran | உதகமண்டலம்
#55764

விபத்து அபாயம்

போக்குவரத்து

ஊட்டி பஸ் நிலையம், மெயின் பஜார், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள், குதிரைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. தற்போது கோடை சீசன் என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் சாலைகளில் அவை நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயமும் நிலவுகிறது. எனவே சாலைகளில் மாடுகள், குதிரைகள் நடமாடுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 11:02 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#55762

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள என்.எச். சாலையில் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள ஐந்து முக்கு சந்திப்பில் இருந்து மாநகராட்சி சந்திப்பு வரை குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினர். குழாய் பதிக்கப்பட்ட பிறகும் சாலையை சரிவர சீரமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 11:01 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#55761

குடிநீர் வினியோகம் இல்லை

தண்ணீர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்பலமூலா அருகே தேனம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick