குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-06-29 16:40 GMT

மேச்சேரி அருகே தைலாக்கவுண்டன் வளவு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதாகி சுமார் ஒரு ஆண்டு ஆகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதான ஆழ்துளை கிணற்றை சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- சஞ்சய், மேச்சேரி.

மேலும் செய்திகள்