Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 4:46 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57308

வாகன ஓட்டிகள் அச்சம்

போக்குவரத்து

சேலம் மாநகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் இரவு நேரங்களில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்களில் சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சாலையில் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் மோட்டார் சைக்கிளில் அதிக சத்தம் எழுப்பியபடியே செல்கிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி போக்குவரத்து போலீசார் இரவில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:40 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#57305

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

மேச்சேரி அருகே தைலாக்கவுண்டன் வளவு பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதாகி சுமார் ஒரு ஆண்டு ஆகிறது. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதான ஆழ்துளை கிணற்றை சரி செய்து தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - சஞ்சய், மேச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:36 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57304

சாலையில் பள்ளம்

சாலை

சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் இருந்து ராஜாஜி ரோடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சில இடங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:35 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57303

வேகத்தடைகள் அவசியம்

சாலை

சேலம் சோனா கல்லூரி அருகே ஏ.வி.ஆர். ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வேகத்தடை அகற்றப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் சேலம் குரங்குச்சாவடியில் இருந்து சங்கர் தியேட்டர் செல்லும் சாலையிலும் வேகத்தடை அகற்றப்பட்டு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க அந்த பகுதிகளில் அவசியம் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிராஜ், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:31 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#57302

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம் நிலவாரப்பட்டி ஆர்.கே.டி. நகரில் இருந்து கவுண்டன்குட்டை செல்லும் வழியில் அடுத்தடுத்து 2 மின் கம்பங்களில் கடந்த சில நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக இரவில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரன், நிலவாரப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:30 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57301

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் ஊராட்சிக்குட்பட்டது மணியனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீட்டர் சாலை கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ராயர்பாளையம், மோளிப்பள்ளி, நல்லிபாளையம் உள்பட பல்வேறு கிராம மக்கள் மணியனூர், கந்தம்பாளையம், பரமத்திவேலூர், கரூர் செல்ல தூரம் குறைவு என்பதால் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் கரடு, முரடான சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். எனவே பயன்படுத்த முடியாத சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:26 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57296

பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

மற்றவை

திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை செட்டிகுட்டைமேடு ஊரிலிருந்து தெற்கு பகுதியில் கிளாப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. அந்த ஊருக்கு செல்ல நெடுஞ்சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெயர் பலகையில் கிளாப்பாளையம் என்பதற்கு பதிலாக கிழபாளையம் என்று தமிழில் தவறாக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் புதிதாக அந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரியாக வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜன், கிளாப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:25 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57295

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி கிராமம் 11 வார்டுகளை கொண்டது. இதில் 2-வது வார்டு அங்காளம்மன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 4 மாதத்திற்கு மேலாகியும் ஆழ்துளை கிணறு பழுதாகி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான ஆழ்துளை கிணற்றை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:23 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57294

வேகத்தடையால் விபத்து

சாலை

கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று வருபவர்கள் அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். இந்த நிலையில் அங்குள்ள வனத்துறை சோதனை சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள 2 வேகத்தடைகளின் உயரம் அதிகமாக இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் சில சமயங்களில் தட்டுத்தடுமாறி செல்கின்றன. அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -ராமன், காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:22 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57292

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் காவலர் குடியிருப்பு எதிரே நடுப்பட்டி சாலை செல்கிறது. இந்த சாலை முகப்பில் இருபுறங்களிலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் எதிரெதிர் வாகனங்கள் செல்ல கடும் சிரமப்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். -சேகர், வெள்ளை பிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:18 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57291

பூட்டியே கிடக்கும் நூலகம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நூலகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -மாதையன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:14 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#57290

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறாா்கள். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக சிலர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick