Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025
Mr.Mohan | ஓமலூர்
#58073

பாதுகாப்பு வேலி அவசியம்

மற்றவை

தாரமங்கலத்தில் ஆடி பண்டிகையையொட்டி கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்தநிலையில் பஸ் நிலையத்தின் கைலாசநாதர் கோவில் பூங்காவின் வளைவில் ஒரு பெரிய சாக்கடை கால்வாய்க்கு தடுப்புகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த இடத்தில் போதுமான மின்விளக்குகளும் இல்லை. எனவே பாதுகாப்பு வேலி அவசியம் அமைக்க தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | எடப்பாடி
#58072

சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்

மற்றவை

தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும்போது தெருநாய்கள் வாகனத்தின் குறுக்கே திடீரென்று ஓடுவதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் இவைகள் கால்நடைகளை கடித்து விடுகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் முன்வர வேண்டும். –-பொதுமக்கள், தேவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | எடப்பாடி
#58071

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தேவூர் அருகே கோணக்கழுத்தானூரில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் சாலையில் குறுக்கே கால்வாய் பாலம் உள்ளது. இந்த கால்வாய் பாலத்தின் வழியாக எல்லப்பாளையம், கல்லம்பாளையம், குறுக்குபாறையூர் உள்பட பல்வேறு கிராமப்புற விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் தினமும் தேவூர் நகர பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கால்வாயில் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கால்வாய் பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58070

சாலையில் வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

சேலம் 4 ரோடு பெரமனூரில் தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சாலையோரம் குடிநீர் குழாய் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் வினிேயாகிக்கப்படுகிறது. தண்ணீர் வரும் நேரங்களில் சாலையில் உள்ள இணைப்பு பகுதியில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. வாரம் ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் இப்படி பொதுமக்களுக்கு கிடைக்காமல் சாலையில் வீணாக செல்கிறதே? என அவர்கள் வருத்தமடைகின்றனர். சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | சேலம்-மேற்கு
#58069

ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

மின்சாரம்

சேலம் சங்கர் நகரில் மின்கம்பம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீேழ விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இந்த மின்கம்பத்தை பொதுமக்கள் கயிற்றால் கீழே விழாதபடி கட்டி வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி ஆபத்தான வகையில் உள்ள இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலாஜி, சங்கர் நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | இராசிபுரம்
#58068

சாலையில் தேங்கும் தண்ணீர்

தண்ணீர்

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர், ஆலம்பட்டி பகுதியில் இருந்து மேட்டு மிஷின் செல்ல தார்சாலை உள்ளது. இந்த தார்சாலையில் இரு புறங்களிலும் போதிய சாக்கடை வசதி இல்லாததால் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வி, ஆலம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | நாமக்கல்
#58067

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

காளப்பநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக செல்லும் பிரதான சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் அவ்வழியே பஸ்கள் உள்பட இருசக்கர வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் சிரமத்துடன் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பிரதான சாலையை சீரமைப்பார்களா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர். -மகேஷ், நஞ்சுண்டாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#58066

எரிந்த நிலையில் மரங்கள்

மற்றவை

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் இருந்து மோகனூர் வாய்க்கால் வழியாக மின் மயான சுடுகாடு, செங்கத்துறை, மற்றும் காவிரி ஆற்று தரைவழி பாலம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் அந்த குப்பைகளை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாய்க்கால் அருகில் உள்ள மரங்களின் அடிப்பகுதி பாதி எரிந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | இராசிபுரம்
#58065

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வடுகம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் பள்ளி குழந்தைகள் உள்பட 21 பேர் தெருநாய்கள் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வா, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | நாமக்கல்
#58064

சாலைகள் சீரமைக்கப்படுமா?

சாலை

குருக்கபுரம் ஊராட்சி எல்லப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து குருசாமிபாளையம் செல்லும் சாலை வரை குடிநீர் குழாய் இணைப்பதற்காக சாலை ஓரத்தில் குழி தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. இதனால் சிமெண்டு சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அதேபோல் திருச்செங்கோடு-ராசிபுரம் மெயின் ரோட்டில் இருந்து குருசாமிபாளையம் வரை செல்லும் தார்சாலை, விநாயகர் கோவிலில் இருந்து வரும் சாலை இணையும் பகுதியில் பள்ளமாக உள்ளது. வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58063

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் இருந்து பெங்களூரு சாலை, சென்னை சாலை, சேலம் சாலை, சப்-ஜெயில் ரோடு, காந்தி சாலை என முக்கிய சாலைகள் பிரிகின்றன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் சாலையோரங்களில் அதிக அளவில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதேபோல பஸ் நிறுத்தங்களிலும் நீண்ட நேரம் பஸ்களை நிறுத்தி வைப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே அந்த பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் போக்குவரத்து பிரிவு போலீசார் கண்காணித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025
Mr.Mohan | ஓசூர்
#58062

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டு அந்திவாடி பஸ் நிலையம் அருகே சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முறையாக நடைபெறாததால் அந்த இடத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது. எனவே உடனடியாக சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதையை தூர்வாரி சுத்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபி, அந்திவாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick