Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jun 2025 4:12 PM GMT
Mr.Mohan | அரூர்
#57289

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தொட்டம்பட்டி ரோட்டில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாலா, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:11 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57288

தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு ஆர்.பி.எஸ். தெரு 2-வது கிராஸ் பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது பற்றி பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:10 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57287

தாழ்வான மின்கம்பியால் ஆபத்து

மின்சாரம்

ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லும் போது தாழ்வாக செல்லும் மின் கம்பியால் இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் சுமந்து செல்லவும், வாகனங்களில் எடுத்து செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே ஆபத்தான தாழ்வாக செல்லும் மின் கம்பியால் அசம்பாவிதம் நேரும் முன் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:08 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57286

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பர்கூர் அடுத்த மல்லப்பாடி, பர்கூர்-திருப்பத்தூர் ரோட்டில் உள்ளது. மல்லப்பாடி ஓம்சக்தி கோவில் எதிரில் 50-க்கும் ேமற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலையோரம் கோவில் பின்புறம் குளம்போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு நோய்கள் பரவும் முன்பு குளம்போல் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -மணி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:06 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57285

பஸ்கள் நின்று செல்லுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வருகிறார்கள். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அதிகமாக வருகிறார்கள். அவர்கள் பஸ்களில் வரும்போது கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படவில்லை. சாதாரண கட்டணத்தில் இயங்க கூடிய பஸ்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகம் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மக்கள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் இருந்து நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:05 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57284

மின்சாரம் இன்றி மக்கள் அவதி

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா மஞ்சுகொண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பேல்பட்டி, நந்திபுரம், ஆ.நந்திபுரம், லட்சமிபுரம், கோடிபுரம், காவேரிபுரம், நாராயணபுரம், பசுவன்புரம், கெஸ்தூர் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் மஞ்சு கொண்டபள்ளி ஊராட்சியில் 2 மாதங்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது, இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இக்கிராமங்கள் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். மின்சாரம் இல்லாததால் குடிநீரின்றி தவித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jun 2025 4:04 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57283

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன. அதேபோல அரசு அலுவலக வளாகத்திலும் அதிக அளவில் மாடுகள் இருப்பதால் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. இவ்வாறு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாரதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:40 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#57134

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

தேவூர் அருகே கொட்டாயூர் பகுதியில் எடப்பாடியில் இருந்து கல்வடங்கம் செல்லும் சாலையும், கோனேரிப்பட்டியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையும் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -திவாகர், தேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:40 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#57133

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் 4 ரோடு பெரமனூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன்பு மின் கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்தபடி காணப்படுகிறது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் கல் ஒன்றை வைத்து முட்டு கொடுத்துள்ளனர். மேலும் கம்பத்தில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. பலத்த காற்று அடித்தால் இந்த மின்கம்பம் விழுந்துவிடும். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்துரு, பெரமனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:39 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57130

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி வழியாக செல்லும் பைபாஸ் சாலை இடங்கணசாலை பிரிவு வரை சாலை செல்கிறது. இந்த சாலையில் ஒரு சில இடங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லை. எனவே இந்த ஒரு வழி சாலையை சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்து கொடுத்தால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனாக இருக்கும். -ராம், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:38 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#57127

சேகரித்த குப்பைகளை எரிக்கலாமா?

குப்பை

தம்மம்பட்டி பேரூராட்சியில் தினமும் ஒப்பந்த தொழிலாளர்கள் அந்தந்த பகுதிகளில் குப்பைகளை சேகரித்து பேரூராட்சி வாகனம் மூலம் கோனேரிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பேரூராட்சி குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் காயிதே மில்லத் நகர், உடையார்பாளையம் பகுதிகளில் தள்ளுவண்டி மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் அண்ணா சமுதாய நலக்கூடம் அருகே கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குப்பைகளை எரிக்காமல் தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:37 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57125

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் ஐந்து ரோடு சுடுகாடு அருகே சாக்கடை கால்வாயில் நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சரியாக செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா? -சசிகிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick