Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 1:10 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58892

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளை அச்சுறுத்துகின்றன. இதனால் சிலர் நாய்க்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சமூக ஆர்வலர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:10 PM GMT
Mr.Mohan | தளி
#58891

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பைல்காடு கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து தினமும் மாணவ, மாணவிகள் அஞ்செட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வரக்கூடிய அஞ்செட்டி-பைல்காடு சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் யாரும் செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமான சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:08 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58890

பராமரிக்கப்படாத பூங்கா

பூங்கா

ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் அருகே சிறுவர் பூங்கா கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் புதர்மண்டி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத அவல நிலை இருந்து வருகிறது. மக்களின் நலன் கருதி இந்த பொழுதுபோக்கு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -மணி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:07 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58889

தெருவிளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அக்ரஹாரம், முல்லை நகர் பகுதிகளில் தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரிவதில்லை. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கிருஷ்ணகிரி சென்று வருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் நடக்கின்றன. மேலும் பெண்கள் அச்சத்துடனே சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பெரியசாமி, முல்லை நகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 1:07 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58887

ஏரியை சூழ்ந்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தேர்பேட்டை செல்லும் வழியில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நகர மக்கள் இந்த ஏரியில் தான் துணிகளை துவைக்க செல்வார்கள். அந்த வகையில் இந்த ஏரி, ஓசூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நாளடைவில் இந்த ஏரியை மக்கள் பயன்படுத்துவது குறைந்து போனது. ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்பட்டாலும் தற்போது நீண்ட காலமாக ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து ஏரியை முழுமையாக ஆக்கிரமித்து விட்டது. எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுவதுமாக அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:54 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58881

நிழற்கூடம் தேவை

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.பள்ளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை விரிவாக்க பணிக்காக அந்த நிழற்கூடம் அகற்றப்பட்டது. தற்போது சாலை பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஏ.பள்ளிப்பட்டி பஸ்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:53 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58879

சாலைகளில் கொட்டப்படும் கழிவுகள்

குப்பை

தர்மபுரி நகரில் கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்கால் ஏரி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள், கட்டிடக்கழிவுகள், உணவகங்களில் சேகரமாகும் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் அங்கு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், மேலும் அந்தப் பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தடைவிதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -கந்தசாமி, மதிகோன்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:52 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58878

இருசக்கர வாகனங்களால் அவதி

போக்குவரத்து

தர்மபுரி நகரில் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சியாளர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சாலைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பிடமனேரி சாலையில் இருக்கும் கடைகளின் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வாகனங்களால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக செல்வதற்கும், நடந்து செல்வதற்கும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:51 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58876

தெருவிளக்குகள் எரிவதில்லை

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து கிராம ஊராட்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் தெருநாய்கள் தொல்லை அதிகமாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகள் எரியவும், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா? -ரவீந்திரன், மெணசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58875

குடிநீர் வீணாகிறது

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். -சாமுவேல், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:44 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#58872

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் 9-வது வார்டு அங்கன்வாடி மையம் செல்லும் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிகண்டன், ஆண்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:43 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#58871

சேதமடைந்த பெயர் பலகை

மற்றவை

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு 12-வது வார்டு கே.ஏ.எஸ். நகரில் தெருவின் பெயர் பலகை உள்ளது. இந்த பலகையில் உள்ள எழுத்துகள் அழிந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதிக்கு புதிதாக வரும் பொதுமக்கள் மற்றும் தபால்காரர், கூரியர் நிறுவன ஊழியர்கள் தெருக்களின் பெயர் தெரியாமல் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே சேதமடைந்த பெயர் பலகையை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் முன்வரவேண்டும். -கண்ணன், மரவனேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick