Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Jun 2025 3:36 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57124

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுப்பட்டி ஊராட்சி நரிகள் கரடு பகுதியில் இருந்து செம்மாண்டப்பட்டி வரை தார்சாலை செல்கிறது. இந்த சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு சாலையின் இரு புறங்களில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -செந்தில், செம்மாண்டப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:35 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57123

சாலையை ஆக்கிரமித்த முட்கள்

மின்சாரம்

ராசிபுரம், ஆண்டகளூளர் கேட் அருகே குருக்கபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து தனியார் பள்ளிகள் செல்லும் பாதைகளின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த வழியாக மாணவர்கள் செல்ல கடும் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -நித்திஷ்ராஜா, குருக்கபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:34 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57122

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆர்.புதுப்பட்டி வழியாக மூலப்பள்ளிப்பட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சேதமான சாலையை புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பிரபு, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:34 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57121

சாக்கடை வசதி

கழிவுநீர்

எலச்சிபாளையம் ஒன்றியம் நல்லிபாளையம் ஊராட்சி செம்பாம்பாளையத்தில் சாக்கடைநீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இதுகுறித்து பலமுறை கிராம சபை கூட்டத்தில் சாக்கடை வசதி கேட்டு கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகினர். எனவே சாக்கடை வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செம்பாம்பாளையம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -மதி, எலச்சிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:33 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#57120

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராசிபுரம் ஆண்டகளூர் கேட்டில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமானவர்கள் சேலம், கரூர், மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய இடங்களுக்கு நூற்றுக்கணக்கான அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். எனவே காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஆண்டகளூர் கேட்டில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:30 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57119

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரில் சாலைகளிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் சாலையின் குறுக்கே அவைகள் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு சில இடங்களில் தெருநாய்கள் தொல்லையால் வீட்டை விட்டு குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? -கார்த்தி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:30 PM GMT
Mr.Mohan | அரூர்
#57118

வேகத்தடைகள் அவசியம்

சாலை

அரூர் பஸ் நிலையத்திற்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் வரும் பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க பஸ் நிலையத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழியிலும், தனியார் மருத்துவமனை அருகேயும், பிரபல துணிக்கடை அருகேயும் வேக்கத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். -மணி, அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:29 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57117

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

கம்பைநல்லூர் மையப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் நிரம்பி தெரு சாலைகளில் வெளியேறுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதுகுறித்து பலமுறை கம்பைநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தும் பலனில்லை. எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -இனியன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:29 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#57116

சாலையில் பெரிய பள்ளம்

சாலை

பாலக்கோடு அடுத்த கரகதஅள்ளி அருந்ததியர் காலனி தார்சாலையில் உள்ள தரைப்பாலம் ஒரு பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் அதில் விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இதே நிலைதான். இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:21 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57115

ஆபத்தான குடிநீர் தொட்டி

தண்ணீர்

மத்தூர் ஒன்றியம் ஆனந்தூரில் இருந்து அரசினர் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் பொதுமக்களின் உபயோகத்திற்காக 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியின் கான்கிரீட் தளமானது விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியை சுற்றிலும் சுகாதாரமற்ற முறையில் அசுத்தமாக உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? -செந்தில்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:20 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#57114

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சூளகிரியில் வாணியர் தெரு, கீழ்த்தெரு மற்றும் தீர்த்தம் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சூளகிரி-பேரிகை சாலையில் உள்ள முனீஸ்வரர் கோவில் எதிரே தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டும், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜா, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Jun 2025 3:20 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#57113

மதுபிரியர்கள் தொல்லை

மற்றவை

ஊத்தங்கரைக்கு அருகே நாகப்பேராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் தினமும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பெண்களிடம் கலாட்டா செய்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி போலீசார் இரும்புக் கரங்கள் கொண்டு இந்த மதுபிரியர்களின் தொல்லையை ஒடுக்க வேண்டும். -ஆர்.காமராஜ், நாகப்பேராம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick