Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 Oct 2025 12:19 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59955

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குட்லானஅள்ளி கிராமத்தில் தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை வாகன ஓட்டிகள், குழந்தைகள், பெண்கள், வயதானவர்களை தெருநாய்கள் கடிக்க விரட்டி செல்கின்றன. பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே தெருநாய்கள் திடீரென ஓடிவருவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - செந்தில், குட்லானஅள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:49 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59866

சேறும் சகதியுமான சாலை

சாலை

சேலம் மாநகராட்சி 21-வது வார்டு பழைய சூரமங்கலத்தில் பெரியார் நகர் உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலையில் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் மேல் மண் போட்டு மூடப்பட்டது. பின்னர் மீதமிருந்த மண்ணை அள்ளாமல் அப்படி விட்டு விட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது. மேலும் தற்போது அந்த சாலையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ணை அகற்றி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:48 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#59865

திருப்பதிக்கு சிறப்பு பஸ்

போக்குவரத்து

தம்மம்பட்டி பஸ் நிலையத்துக்கு தினமும் 110 பஸ்கள் வந்து செல்கின்றன. தம்மம்பட்டியிலிருந்து சென்னை செல்ல காலை, இரவு 2 பஸ்களும், பழனி, பெங்களூரு, கோவைக்கு தலா ஒரு பஸ்சும் செல்கின்றன. தம்மம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோர் சேலம், ஆத்தூர் சென்று அங்கிருந்து திருப்பதிக்கு செல்கின்றனர். எனவே தம்மம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து ஒரு சிறப்பு பேருந்து வழித்தடத்தை தோற்றுவித்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஆத்தூர் வழியாக திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:47 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#59864

கிணற்றுக்கு சுற்றுச்சுவர்

மற்றவை

மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் மாரியம்மன் கோவில் பகுதியில் கிணறு ஒன்று மெயின் ரோட்டை ஒட்டி உள்ளது. இந்த கிணற்றில் நீர் நிரம்பி அபாய நிலையில் உள்ளது. ஆனால் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால் பள்ளி மாணவர்கள் இந்த ரோட்டின் வழியாக சென்று வருகிறார்கள். சாலையை ஒட்டியுள்ள இந்த கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிராகவன், நங்கவள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:47 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59863

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்தி நகர் 4-வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் தேவைக்காக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மெய்வேல், ஜாகீர் அம்மாபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:42 PM GMT
Mr.Mohan | பரமத்தி-வேலூர்
#59862

ஆபத்தான பெயர் பலகை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையோரம் பெயர் பலகை உள்ளது. இந்த பலகை நாளுக்குநாள் சாய்ந்து கொண்டே வருகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது பெயர் பலகை விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான பெயர் பலகையை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும். -மணிகண்டன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:41 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59861

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தண்ணீர்

நாமகிரிபேட்டை பேரூராட்சியில் 18-வார்டுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிதாக பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பைப்லைன் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வீடுகளுக்கு செல்ல முதியவர்கள், குழந்தைகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட பைப்லைனை சாலையில் பதித்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -கீதாஞ்சலி, நாமகிரிபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:40 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#59860

விபத்து ஏற்படும் அபாயம்

சாலை

கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளிக்கு செல்வதற்கு சேந்தமங்கலம் வழியாக பிரதான சாலை உள்ளது. அந்த சாலையில் அடிக்கடி விவசாய விளை பொருட்களை உணர்த்தும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொல்லிமலைக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் சரிந்து விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் பொருட்களை உலர வைப்பதை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுந்தரேசன், ஆர்.பி. புதூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:39 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#59859

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

திருச்செங்கோடு தொண்டிகரடு வீடில்லாதோர் சங்க காலனியில் 45-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வீடுகளை சுற்றி நடைபாதைகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது. செடி, கொடிகள், முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேட்டுப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகள், கழிவுநீர் காலனி குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், திருச்செங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:37 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#59858

பஸ் நிலையம் தேவை

போக்குவரத்து

நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஸ்களை சாலையில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - நம்பிராஜன், மெட்டாலா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:31 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59857

தெருவிளக்கு எரியவில்லை

மின்சாரம்

நல்லம்பள்ளி காமராஜர் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள் இரவில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகளை சீரமைத்து எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Oct 2025 5:30 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#59856

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே உள்ள கர்த்தாரப்பட்டி முதல் அகரம்-கம்மாளப்பட்டி செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகள்கு முன்பு தான் புதுப்பிக்கப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழரசன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick