Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Aug 2025 12:42 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58870

அடிக்கடி விபத்துகள்

சாலை

ஓமலூர் வட்டம் தின்னப்பட்டி-நாலுகால் பாலம் வரை செல்லும் தார்சாலை மிகவும் குறுகளாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகளவில் அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஊர்மக்கள், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:30 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58868

இருள்சூழ்ந்த பஸ் நிறுத்தம்

மின்சாரம்

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் கேண்டீன் பஸ் நிறுத்தம் உள்ளது. ஓமலூர்-தர்மபுரி செல்லும் வழியில் தீவட்டிப்பட்டி அடுத்துள்ள மிக முக்கிய பஸ் நிறுத்தம் இதுவாகும். இந்த இடத்தில் தற்போது பாலம் வேலை நடைபெறுவதால் அனைத்து மின் கம்பங்களும் அகற்றப்பட்டன. மேலும் எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள் செயல்படவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தில் மின்விளக்குகள் மற்றும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:30 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#58867

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

மேட்டூர் அணை வட்டம் ராமன் நகர் பகுதி கெம்ப்ளாஸ்ட் 2-வது கேட் எதிரில் பூங்காவிற்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு மின் கம்பம் உள்ளது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. வேகமாக காற்று அடித்தால் மின்கம்பம் கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். -செந்தில் முருகன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2025 12:29 PM GMT
Mr.Mohan | கங்கவள்ளி
#58866

பயன்படாத சுகாதார நிலையம்

மற்றவை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த புனல்வாசல் கிராமத்தில் பொதுமக்கள் நலன் காக்க ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி புனல்வாசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைத்தை புதுப்பித்து தரம் உயர்த்தி பயன்பாட்டுக்கு அதிகாரிகள் கொண்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:11 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#58746

பஸ் சேவையில் மாற்றம் தேவை

போக்குவரத்து

சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும், ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையத்திற்கும் புதிய பஸ் நிலையம் வழியாக இரவு சேவை (நைட் சர்வீஸ்) டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை தினசரி இரவு 11 மணி முதலே இயங்க தொடங்குகின்றன. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகிறது. எனவே இந்த இரவு சேவை பஸ்களின் நேரத்தை நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாற்றி அமைத்து இயக்கினால் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும். -நாராயணன், பெரமனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:10 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#58745

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து

தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, மேட்டூர் பகுதிகளில் இருந்து சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ்கள் சேலம் 5 ரோடு வழியாக செல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலான பஸ்கள் மேம்பாலம் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கு சென்று வருவதால் பயணிகளை குரங்குச்சாவடி அருகே உள்ள மேம்பால நுழைவு பகுதியிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்து 5 ரோட்டிற்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அனைத்து பஸ்களும் 5...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:08 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#58744

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் 4 ரோடு பெரமனூரில் உள்ளது தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதிவாரியம். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது குடிநீர் குழாய் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை தண்ணீர் வரும்போதும் குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைந்த அளவு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ளவர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அங்குள்ள பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:07 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58743

மின்விளக்கு அமைக்க வேண்டும்

மின்சாரம்

தாரமங்கலம் ஏ.டி.சி. பஸ் டெப்போ மற்றும் அய்யனாரப்பன் கோவில் அருகே பைபாஸ் 4 வழி சாலையாக உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்குகள், வேகத்தடைகள் மீது ஒளிரும் பட்டைகள், எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சசி, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:06 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#58742

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

தலைவாசல் ஒன்றியம் ஆறகளூர் ஊராட்சியில் இருந்து சித்தேரி கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் ஓடை உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதால் மழைக்காலத்தில் நீர் ஓடையில் செல்லாமல் சாலையில் ஓடும் சூழ்நிலை உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் முகம் சுளித்து செல்கின்றனர். எனவே குப்பைகளை தூர்வாரி ஓடையில் தண்ணீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். -குமாரசாமி, தலைவாசல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 2:05 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#58741

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

மின்சாரம்

சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இது எந்த நேரத்திலும் சாய்ந்துவிடும் நிலைமையிலும் ஆபத்தாக காணப்படுகிறது. இதன் அருகே நகராட்சி பள்ளி மற்றும் செவ்வாய்பேட்டை பள்ளிவாசல் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு டிரான்ஸ்பார்மரின் மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், குகை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:46 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58733

விழும் நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அய்யம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மூலக்கடை காய்காடு பகுதியில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இது எப்போது வேண்டுமானாலும் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மின்வாரியத்துறை ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:45 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#58731

பாலத்தில் குப்பைகள் கொட்டலாமா?

குப்பை

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திப்பாளையத்தில் ஒரே ஒரு பாலம் மட்டுமே உள்ளது. இந்த பாலத்தின் நுழையும் இடத்திலேயே அப்பகுதி மக்கள் குப்பைகள், இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகள் அனைத்தும் பாலத்தின் கீழே ஓடையில் விழுவதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -விக்னேஷ், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick