Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Aug 2025 1:44 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58730

குழியால் விபத்து

சாலை

வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அந்த குழி மூடப்படாமல் மாதக்கணக்கில் உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குழியை விரைந்து மூடி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சசிகுமார், அளவாய்ப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:41 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#58726

பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

மற்றவை

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் புதிய வளாகத்தில் வாரச்சந்தை தற்போது நடந்து வருகிறது. அதில் சில வியாபாரிகள் வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே அங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சத்யராஜ், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:40 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58725

கிணற்றை மூட வேண்டும்

மற்றவை

எலச்சிபாளையம் அருகே கோ.எளையாம்பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிணறு ஒன்று உள்ளது. இது தற்போது பாழடைந்து தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்த கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பை கழிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கிணற்றை எட்டிப்பார்க்கும் போது அதில் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை மண்ணை கொட்டி மூடவும் அல்லது இரும்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:39 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#58723

ஆபத்தான மரம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மணியனூரில் அப்புச்சிமார் கோவில் அருகே மூன்று ரோடு பிரியும் பிரதான தார்சாலை அமைந்துள்ளது. இந்த தார்சாலை வழியாக கந்தம்பாளையத்தில் இருந்து மணியனூர் அண்ணமார் கோவில் மற்றும் மணியனூர் வாரச்சந்தை, மணியனூர் ஊருக்குள் போகும் பிரதான தார்சாலையாக உள்ளது. இந்தநிலையில் அப்புச்சிமார் கோவில் அருகே சாலையோரம் காய்ந்த பெரிய புளியமரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அந்த மரத்தின் மேலே மின்கம்பிகள் செல்கின்றன. இதனால் வேகமாக காற்று அடித்தால்கூட அந்த மரம் முறிந்து விழுந்து அசம்பாவிதங்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:29 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#58721

சுகாதார சீர்கேடு

குப்பை

ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சிகரஅள்ளியில், சாலை ஓரம் ஆங்காங்கே மலைபோல் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இந்த காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்குமோ? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். -முத்துக்குமார், சிகரல அள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:27 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58720

இருண்டு கிடக்கும் பிரதான சாலை

சாலை

தர்மபுரி நகரில் பென்னாகரம் சாலை மிகவும் முக்கியம் வாய்ந்த சாலையாகும். எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் முதல் சோகத்தூர் கூட்ரோட்டில் உள்ள அதியமான்கோட்டை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த பிரதான சாலை இருண்டு கிடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக வந்து செல்கின்றன. எனவே இந்த...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58719

சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி நகரில் பிரதான சாலைகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும்போது கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைவதுடன், பொதுமக்கள் சாலைகளில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் ஒரு சில பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாராமலும், மற்ற பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் முறையாக வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன் தர்மபுரி நகரில் உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:24 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58718

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள், பாம்புகள் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரை அகற்றி விட்டு புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பொதுமக்கள், நாகர்கூடல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 1:22 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58717

பயன்படாத குடிநீர் தொட்டி

தண்ணீர்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கெலவள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னமாவடிப்பட்டி. இந்த பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை பழுதடைந்தது. இதனால் அந்த குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்த மின் மோட்டார், குடிநீர் தொட்டியை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க உள்ளாட்சி...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:24 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#58680

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

ஊத்தங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டி ஊராட்சி சின்ன கணக்கம்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், நொச்சிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:23 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#58679

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

ஓசூரில் உழவர் சந்தை சாலை மற்றும் எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் சாலையின் நடுவே நாள்தோறும் மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் அவை நீண்ட நேரம் சாலையின் நடுவிலேயே நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுவதுடன், மிகவும் அவதியடைந்து வருகின்றனர். உழவர் சந்தையிலுள்ள கடைகளில் மாடுகள் திடீரென புகுந்து காய்கறிகளை உண்பதால் வியாபாரிகள் மட்டுமின்றி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அச்சமடைகின்றனர். எனவே சாலைகளில் மாடுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58678

லாரிகளால் விபத்துகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இடத்தில் சாலையோரத்தில் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து லாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றன. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையில் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick